News October 26, 2024
இரவில் அறைக்கு அழைத்தனர்… பிரபல நடிகை பகீர்

இரவில் தங்களது அறைக்கு வருமாறு ஹீரோக்கள் அழைத்ததாக ஹிந்தி நடிகை மல்லிகா செராவத் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மர்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், அண்மையில் படப்பிடிப்புக்காக துபாய் சென்றபோது, அந்தப்பட ஹீரோ தனது அறை கதவை தட்டியதாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது, ஹிந்தி ஹீரோக்கள் சிலர் இரவில் அவர்களின் அறைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் மறுத்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.
Similar News
News July 9, 2025
கில்லுக்கு 10/10 மார்க்: ரவி சாஸ்திரி!

ENG-க்கு எதிராக 2-வது டெஸ்டில் பேட்டிங்கிலும் கலக்கிய இந்திய கேப்டன் கில்லுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அவரின் கேப்டன்ஷிப்புக்கு 10/10 மார்க் வழங்குவேன் என Ex. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் ஒரு இந்திய கேப்டனின் பெஸ்ட் இது எனக் குறிப்பிட்ட அவர், ஆகாஷ் போன்ற ஒரு பவுலரை கரெக்ட்டாக பயன்படுத்தியதற்கு கில்லை பாராட்டியாக வேண்டும் எனவும் தெரிவித்தார்.
News July 9, 2025
B.Ed. சேர்க்கை விண்ணப்பம் இன்றுடன் நிறைவு

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் B.Ed. படிப்பிற்கான விண்ணப்பம் இன்றுடன் (ஜூலை 9) நிறைவடைகிறது. இதனையடுத்து ஜூலை 18-ல் தரவரிசை வெளியிடப்படுகிறது. தொடர்ந்து ஜூலை 21-25 வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூலை 28-ல் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டு, முதலாமாண்டு வகுப்புகள் ஆக.6-ல் தொடங்கவுள்ளன. விருப்பமுள்ள மாணவர்கள் இந்த லிங்கை <
News July 9, 2025
தமிழகத்தில் இன்று பஸ், ஆட்டோ ஓடுகிறதா? புது அப்டேட்

சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் சற்று குறைந்த அளவில்(80%) அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவை, குமரி, திருப்பூர் மாவட்டங்களிலிருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பஸ்கள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. புதுச்சேரியில் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்கள் சற்று பாதிக்கப்பட்டுள்ளனர். புதுவையில் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.