News October 26, 2024

புயலுக்கு இடையே 2,201 குவா, குவா ❤️❤️❤️

image

ஒடிசாவில் “டானா” தீவிர புயலுக்கு இடையே 2,201 கர்ப்பிணிகள் குழந்தை பெற்றிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. புயலையொட்டி 4,859 கர்ப்பிணிகள், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2,201 பேர் குழந்தை பெற்றெடுத்தனர். இதில் 18 ஜோடிகள் இரட்டை குழந்தை ஆகும். 1,858 குழந்தைகள் இயற்கையாக பிறந்ததாகவும், 343 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்ததாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News

News February 2, 2026

பெரம்பலூர்: இன்று இங்கெல்லாம் மின்தடை!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், கழனிவாசல், மங்களமேடு, நன்னை ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (பிப்.02) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, திருமந்துறை, பெருமாத்தூர், வாலிகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகள் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

News February 2, 2026

திமுகவில் இணைந்தார்.. அன்புமணி அதிர்ச்சி

image

வன்னியர் பாதுகாப்பு பேரியக்க தலைவர் செந்தில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். புதுவை திமுக தேர்தல் பொறுப்பாளரும், MP-யுமான ஜெகத்ரட்சகன் ஏற்பாட்டில் இந்த இணைப்பு நடந்துள்ளது. வரும் தேர்தலில் புதுவையில் திமுக- காங்., கூட்டணி ஆட்சியை கைப்பற்ற பல்வேறு வியூகங்களுடன் மாற்றுக் கட்சியினரை தங்கள் வசம் இழுத்து வருகின்றனர். செந்தில் திமுகவில் இணைந்தது அன்புமணி தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.

News February 2, 2026

தவெகவில் இணைய OPS-க்கு அழைப்பு

image

அதிமுகவில் இணைய OPS விரும்பினாலும், அதற்கு வாய்ப்பில்லை என EPS திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், தவெகவில் OPS இணைய வேண்டும் என அவருடைய ஆதரவாளராக இருந்த ஜேசிடி பிரபாகர் அழைப்பு விடுத்துள்ளார். விரைவில் OPS நல்ல முடிவெடுப்பார் என்று நம்புவதாகவும், அவர் தவெகவிற்கு வருவது தான் நல்ல முடிவாக இருக்கும் எனவும் ஜேசிடி பிரபாகர் கூறியுள்ளார். விஜய்யின் தலைமையை OPS ஏற்பாரா?

error: Content is protected !!