News October 26, 2024
முத்ரா கடன் வரம்பு ₹20 லட்சமாக உயர்வு

முத்ரா யோஜனா கடன் திட்ட உச்ச வரம்பு ₹20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2015இல் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ் சிறு, குறு, நடுத்தர மற்றும் கார்ப்பரேட் அல்லாத வேளாண் தொழில் சாராத நிறுவனங்களுக்கு ₹10 லட்சம் கடன் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி அதன் உச்சவரம்பை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இத்திட்டத்தில் கடன் பெற எந்த சாெத்தையும் அடகு வைக்க தேவையில்லை.
Similar News
News January 16, 2026
போர் பதற்றம்.. இந்தியர்களுக்கு உதவு எண்கள் அறிவிப்பு

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் மூளும் சூழல் அதிகரித்து வருவதால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் கவனமாக செயல்பட அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்தியர்கள் தேவையில்லாமல் இஸ்ரேல் செல்ல வேண்டாம் என கூறியுள்ள தூதரகம், +972-54-7520711, +972-54-3278392 ஆகிய அவசரகால உதவி எண்களையும் அறிவித்துள்ளது.
News January 16, 2026
ஜனநாயகத்தை கொல்லும் முயற்சி: உத்தவ் தாக்கரே

நேற்று நடந்த <<18868876>>மும்பை நகராட்சி தேர்தலில்<<>> பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக உத்தவ் தாக்கரே குற்றஞ்சாட்டியுள்ளார். இது ஜனநாயகத்தை கொல்லும் முயற்சி எனவும், மாநில தேர்தல் ஆணையரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, ECI இணையதளத்தில் தங்களது பெயர் இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என கூறி திருப்பி அனுப்பப்பட்டதாக பலரும் புகாரளித்திருந்தனர்.
News January 16, 2026
நீங்களும் கடன் வாங்கி EMI கட்டுறீங்களா?

இன்ஸ்டன்ட் லோன் ஆப்கள், கிரெடிட் கார்டுகளால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் EMI எனும் பெரும் கடன் வலையில் சிக்கியுள்ளது Eresolution Consultancy நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 10,000 பேரில் நடத்தப்பட்ட ஆய்வில், ₹35,000 – ₹65,000 வரை மாத சம்பளம் வாங்கும் 85% பேர் தங்களது சம்பளத்தில் 40% EMI செலுத்துகின்றனர். அடிப்படை தேவைகளுக்கு கூட அவர்கள் பணம் இல்லாமல் தவிப்பதும் தெரியவந்துள்ளது.


