News October 26, 2024
இந்தியாவுடன் நட்பு.. பாக்.கிற்கு பரூக் வலியுறுத்தல்

வன்முறையை நிறுத்திவிட்டு, இந்தியாவுடன் நட்புறவை ஏற்படுத்தும் வழியை பாக். கண்டுபிடிக்க வேண்டுமென என்.சி. கட்சி நிறுவனர் பரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். குல்மார்க் தீவிரவாத தாக்குதலில் 4 பேர் பலியானதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், பாகிஸ்தானின் ஒரு பகுதியாக ஜம்மு-காஷ்மீர் ஆகாது. அப்படியிருக்கையில் ஏன் இதை அவர்கள் செய்கிறார்கள்? எங்கள் எதிர்காலத்தை பாதிக்கவா? எனக் கேள்வியெழுப்பினார்.
Similar News
News January 20, 2026
Ro-Ko-வுக்கு ஷாக் கொடுக்கவுள்ள BCCI?

A+,A,B,C போன்ற பிரிவுகளின் கீழ் வீரர்களுக்கு BCCI சம்பளம் வழங்கி வருகிறது. தற்போது, A+ பிரிவை நீக்க BCCI ஆலோசித்து வருவதால், ரோஹித் & கோலி ஆகியோர் B பிரிவுக்கு தள்ளப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்திய அணிக்காக அனைத்து ஃபார்மட்டிலும் விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே A பிரிவில் இடமளிக்கப்படும். இன்னும் ஓரிரு நாள்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
News January 20, 2026
தேசிய கீதம் இசைப்பதில் என்ன பிரச்னை? வானதி

கவர்னர் விவகாரத்தில் திமுக அரசு ஆதிக்க மனப்பான்மையையோடு நடப்பதாக வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். தேசிய கீதம் இசைப்பதில் திமுகவுக்கு ஏன் பிடிவாதம் என கேட்ட அவர், தமிழ்த்தாய் வாழ்த்துக்கும், தேசிய கீதத்துக்கும் சம மரியாதை வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், மாநில அரசுக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க திட்டமிட்டே முயற்சிகள் நடப்பதாகவும் கூறியுள்ளார்.
News January 20, 2026
மாதம் ₹2,000.. தமிழக அரசு அறிவிப்பு

‘அன்புக்கரங்கள்’ திட்டம் மூலம் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் TN அரசு ₹2,000 வழங்குகிறது. 18 வயது நிறைவடையும் வரை தொகை வழங்கப்படுவதோடு, உயர்கல்விக்கும் அரசு உதவி செய்யும். பெற்றோர் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் நோய்களுடன் வாழ்ந்தாலோ (அ) மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறனாளியாக இருந்தாலோ கூட இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். தாலுகா ஆபீஸை அணுகுங்கள். SHARE.


