News October 26, 2024
ராமநாதபுரம் இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை திரு. சுதிர்லால் DSP தலைமையில் காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
Similar News
News February 4, 2026
முதுகுளத்தூரில் மின்கம்பம் மீது மோதி கார் விபத்து

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை அருகே உயர்மின் அழுத்த மின்கம்பம் உள்ளது. அவ்வழியாக மதுரையில் இருந்து முதுகுளத்தூர் அருகே பூக்குளம் கிராமத்திற்கு செல்வதற்காக சேதுராமன் என்பவர் சொகுசு காரில் வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தூக்க கலக்கத்தில் உயர் மின்னழுத்த மின்கம்பம் மீது சொகுசு கார் மோதி விபத்து ஏற்பட்டது விபத்து குறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News February 4, 2026
ராம்நாடு: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

செகுடி கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் விஜய காந்த் (40) என்பவர் திருப்பூரில் வசித்து வந்தார். அங்கு குடும்பத்தில் ஏற்பட்ட கடன் பிரச்சனை காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வந்து பிப்.4ல் செகுடி காளி கோவில் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவாடனை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
News February 4, 2026
ராம்நாடு: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsAppல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!


