News October 25, 2024
ஒரு சிக்சர் கூட அடிக்க முடியவில்லை: மேக்ஸ்வெல்

IPL 2020ல் தன்னால் ஒரு சிக்சர் கூட அடிக்க முடியவில்லை என்று ஆஸ்திரேலியா வீரர் கிளென் மேக்ஸ்வெல் வருத்தம் தெரிவித்துள்ளார். அப்போது தான் மிகுந்த அழுத்தத்தில் இருந்ததாக அவர் தனது ‘தி ஷோமேன்’ புத்தகத்தில் தெரிவித்துள்ளார். IPL முடிந்ததும் ஆஸ்திரேலியாவிற்காக ஆடியபோது முதல் சிக்ஸர் அடித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து PBKS கேப்டனாக இருந்த KL ராகுலிடம் போனில் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
Similar News
News January 15, 2026
மதுரை: டிப்பர் லாரியில் சிக்கி ஒருவர் பலி

ஒத்தக்கடை நரசிங்கத்தை சேர்ந்தவர் வீரமுத்து (54). டிப்பர் லாரி டிரைவரான இவர் லாரியில் இருந்த சரக்கை இறக்கி விட்டு, பின்பகுதியை தூக்கி வைத்தபடி அதை இன்று சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டிப்பர் லாரி மெக்கானிசம் பழுதாகி சட்டென கீழே இறங்க அதில் தலை சிக்கி டிரைவர் வீரமுத்து பலியானார். இதுக்குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரணை.
News January 15, 2026
பொங்கல் ட்ரீட்: மாப்பிள்ளைக்கு 158 வகை உணவுகள்!

தலைபொங்கல் என்றாலே மாப்பிள்ளைகளுக்கு மாமனார் வீட்டில் ராஜ உபசரிப்புதான். ஒவ்வொரு குடும்பத்தினரும் போட்டி போட்டுக் கொண்டு, பல வகையான உணவுகளை விருந்து வைத்து அசத்துவர். அந்த வரிசையில் இந்த பொங்கலுக்கு இவர்கள்தான் டாப்பு. ஆந்திராவின் தெனாலி பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தனது மாப்பிள்ளைக்கு சுமார் 158 வகை உணவுகளை பரிமாறி உள்ளனர். உங்க தலைபொங்கலுக்கு மாமனார் வீட்டில் என்ன விருந்து வெச்சாங்க?
News January 15, 2026
BREAKING: பொங்கல் நாளில் பணம் அறிவித்தார் முதல்வர்

பொங்கல் திருநாளில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். பருவமழை, டிட்வா புயலால் 1.39 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட 84,848 விவசாயிகளின் வங்கி கணக்கில் நிவாரணத் தொகையை செலுத்தும் வகையில், ₹111.96 கோடி ஒதுக்கீடு செய்து, 33%-க்கு மேல் பயிர் சேதம் ஏற்பட்ட அனைத்து பயிர்களுக்கும் ஒரு ஹெக்டேருக்கு ₹20,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


