News March 18, 2024

வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா சின்னவேப்பம்பட்டு கிராமத்தில் புல எண்: 37ல், 3.18.50 பரப்பளவில் திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் மற்றும் குடியிருப்பு அமைய உள்ளதாக அதற்கான ஆணைகளையும் விடப்பட்டுள்ளது. கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் உள்ள தென்னை மரம் 8 வேப்பமரம் 18 மற்றும் உள்ள மரங்களை அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Similar News

News October 24, 2025

திருப்பத்தூர்: கரை ஒதுங்கிய பெங்களூர் பெண்ணின் சடலம்!

image

ஜோலார்பேட்டை அருகே பொன்னேரி ஊராட்சி பகுதியில் ராமனூர் ஏரியில் அடையாளம் தெரியாத பெண் சடலம் இருப்பதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை செய்ததில் இறந்தவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என தெரியவந்தது. இவர் எதற்காக ஜோலார்பேட்டை பகுதியில் இறந்து கிடந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 24, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன்.வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளின் செல்போன் எண்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்!

News October 24, 2025

திருப்பத்தூரில் தூய்மை பணியாளர்கள் குறைதீர் கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி தலைமையில் அக்.31 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தரைதள கூட்டரங்கில் நடைபெற உள்ளது. தூய்மை பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து அதன் மீது தீர்வுக்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

error: Content is protected !!