News October 25, 2024

விவசாயிகளுக்கு நாகை ஆட்சியர் வேண்டுகோள்

image

நாகை மாவட்டத்தில் 65000 ஹெக்டர் சம்பா சாகுபடி பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்த நிலையில் விவசாயிகளின் நலன் கருதி தேவையான அளவு யூரியா மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் வரவழைக்கப்பட்டு கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர நிறுவனங்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது. எனவே விவசாயிகள் உரம் வாங்கும் போது கட்டாயம் ஆதார் அட்டையை கொண்டு சென்று உரங்கள் வாங்கிட வேண்டுமென ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.

Similar News

News August 13, 2025

நாகை-தஞ்சை பயணிகள் ரயிலின் நேரம் மாற்றம்

image

பராமரிப்பு பணிகள் காரணமாக பிற்பகல் 1 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட்டு நாகப்பட்டினம், கீழ்வேளுர் வழியாக தஞ்சாவூர் வரை செல்லும் பயணிகள் ரயிலானது ஆகஸ்ட் 13-ம் தேதி (இன்று) முதல் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை, ஒரு மணி நேரம் தாமதமாக பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

நாகை: மத்திய அரசு வேலை; EXAM கிடையாது!

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில், பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பபடவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, வரும் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News August 13, 2025

நாகை: 10 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து

image

கீழ்வேளுர் – திருவாரூர் இடையே ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் காரைக்காலில் இருந்து பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு நாகை, கீழ்வேளுர் வழியாக திருச்சி செல்லும் பயணிகள் ரயில் வருகின்ற ஆக.13-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!