News October 25, 2024

₹50,000 பெறலாம்.. இந்த திட்டம் பற்றி தெரியுமா?

image

அமைப்பு சாரா தொழிலாளர்கள், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதை ஊக்கப்படுத்த தமிழக அரசு நிதியுதவி வழங்குகிறது. தொழிலாளர்கள், அவர்களது குழந்தைகள், தேசிய போட்டிகளில் பங்கேற்றால் ₹25,000, சர்வதேச போட்டிகளுக்கு ₹50,000 நிதியுதவி வழங்குகிறது. பங்கேற்கும் ஆண்டில் மட்டும் ஒரு முறை அந்த நிதி வழங்கப்படும். இதற்கு, அரசு அங்கீகரித்த 18 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்திருக்க வேண்டும்.

Similar News

News August 24, 2025

நெல்லை கூட்டத்தால் அமித்ஷா அப்செட் என தகவல்

image

அண்மையில் நெல்லையில் நடந்த பாஜக பூத் முகவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த அமித்ஷா கூட்டத்தை பார்த்ததும் அப்செட் ஆனதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 1.5 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என அவரிடம் கூறப்பட்டதாம். ஆனால் அதில் பாதி பேர் கூட வராததால் பல இருக்கைகள் காலியாக இருப்பதை கண்டு அதிர்ந்ததோடு, மாநாட்டில் பேசும்போது மொத்தக் கூட்டமும் கலைந்ததை கண்டு அவரே அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.

News August 24, 2025

பாப் மார்லி பொன்மொழிகள்

image

*சிலர் மழையை உணர்கிறார்கள். சிலர் வெறுமனே நனைகிறார்கள்.
* உலகை அடைந்து உங்கள் ஆன்மாவை இழக்காதீர்கள். தங்கம் வெள்ளியை விட ஞானமே சிறந்தது.
* இசை குறித்த ஒரு நல்ல விஷயம் என்னவெனில் அது உங்களை தாக்கும் போது உங்களுக்கு வலிப்பதில்லை.
* சிறையில் உழல்வதைவிட, போராடி மரித்துப் போ.
* நான் படிக்கவில்லை. தேடல் மட்டுமே என்னிடம் இருந்தது. படித்திருந்தால் நான் முட்டாளாகி இருப்பேன்.

News August 24, 2025

ராமதாஸ் – அன்புமணி இடையே பூசாரி வேலை பார்ப்பது யார்?

image

ராமதாஸ் – அன்புமணி இடையே பூசாரி வேலைப் பார்ப்பதில் முக்கியமானவர் வழக்கறிஞர் கே.பாலு என MLA அருள் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் எனச் சொல்லிக்கொண்டு அன்புமணியைத் தவறாக வழிநடத்துவதாகவும் கூறினார். பாமக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களுக்கு நிறுவனர் அழைக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் விதி என்றும், அதை மறைத்து கே.பாலு போன்றவர்கள் வசதிக்கேற்ப பேசுவதாகவும் அதில் துளியும் உண்மை இல்லை என்றார்.

error: Content is protected !!