News October 25, 2024

35 மாணவர்கள் ஹாஸ்பிட்டலில் அனுமதி

image

சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவால் 35 மாணவ, மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. வேதியியல் ஆய்வகத்தில் இருந்து வாயு கசிந்ததால் பள்ளியின் 3ஆவது தளத்தில் இருந்த மாணவர்கள் ஒவ்வொருவராக மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளனர். இதனையடுத்து, அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Similar News

News January 19, 2026

காற்றின் மூலம் பவர் சப்ளை! அசத்திய விஞ்ஞானிகள்

image

பின்லாந்து விஞ்ஞானிகள் கம்பிகள் இல்லாமல் காற்றில் மின்சாரத்தை கடத்தி புதிய சாதனை படைத்துள்ளனர். Helsinki மற்றும் Oulu பல்கலைகளை சேர்ந்த விஞ்ஞானிகள் அல்ட்ரா சோனிக் ஒலி அலைகள் மற்றும் லேசர் பீம்களின் உதவியுடன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மின்சாரத்தை வெற்றிகரமாக அனுப்பியுள்ளனர். சோதனை நிலையில் உள்ள இந்த தொழில்நுட்பம், எதிர்காலத்தில் கம்பிகளின் தேவையை குறைக்கும் என கூறப்படுகிறது.

News January 19, 2026

35 வயதை நெருங்கிவிட்டீர்களா? அலர்ட்!

image

ஸ்வீடனின் Karolinska Institutet மேற்கொண்ட ஆய்வில் 35 வயதிலிருந்தே உடல் திறன், வலிமை குறைய தொடங்குவது கண்டறியப்பட்டுள்ளது. இளம் வயதில் உடற்பயிற்சி செய்திருந்தாலும், இந்த வீழ்ச்சி தொடங்குவதாக ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால், வயதான பிறகும், உடற்பயிற்சியை தொடங்கியவர்கள், 5-10% வரை உடல் திறனை மேம்படுத்த முடிந்தாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்டவர்களை, பல ஆண்டுகள் கண்காணித்து ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

News January 19, 2026

மீண்டும் 3 நாள்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

image

பொங்கல் விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படத் தொடங்கிவிட்டது. இனி எப்போது விடுமுறை வரும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்குதான் இந்த ஹேப்பி நியூஸ். ஆம்! ஜன.24, 25 (சனி, ஞாயிறு) மற்றும் ஜன.26-ம் தேதி குடியரசு தினம் என்பதால், தொடர்ந்து 3 நாள் விடுமுறை வருகிறது. எனவே, மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் இப்போதே பயணத்தை திட்டமிடுங்கள்.

error: Content is protected !!