News October 25, 2024

நடத்துநரின் குடும்பத்திற்கு ₹10 லட்சம் நிவாரணம்

image

சென்னை மாநகர பேருந்து நடத்துநர் ஜெகன்குமார் குடும்பத்துக்கு ₹10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நடத்துநர் ஜெகன்குமாருக்கும், போதையில் இருந்த பயணி கோவிந்தனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. இதில் கீழே விழுந்த நடத்துநர் ஜெகன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், ஜெகனின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 23, 2025

ரயில்வே தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு

image

அசாமில் உள்ள கோக்ரஜார் ரயில் நிலையத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில், ரயில் தண்டவாளம் மர்மநபர்களால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அந்த பாதையில் காலை 8 மணி வரை ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. உடனடியாக அதிகாரிகள் பாதையை சீரமைத்ததால், மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்படாத நிலையில், அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

News October 23, 2025

மரங்கள் ஒன்றோடு ஒன்று பேசும்; எப்படி தெரியுமா?

image

மரத்தின் வேர்கள் mycorrhizal பூஞ்சைகள் மூலம் பூமியின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு மரத்தின் இலையை பூச்சிகள் சாப்பிட்டு அழித்தால், மரத்தின் வேரில் இருந்து ரசாயன சிக்னல்கள் வெளியேறும். பூஞ்சைகள் இந்த சிக்னலை மற்ற மரங்களுக்கு கடத்தும். இந்த சிக்னல்களை புரிந்துகொள்ளும் பிற மரங்கள் தங்கள் மரத்தின் இலைகள் பூச்சிகள் சாப்பிடாத படி கசப்பாக மாற்றும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. SHARE.

News October 23, 2025

BREAKING: முக்கிய அமைச்சரை தூக்குகிறாரா CM ஸ்டாலின்?

image

கனமழையால் சென்னை உள்ளிட்ட இடங்களில் வெள்ள முன்னெச்சரிக்கை பணிகளில் CM ஸ்டாலின், உதயநிதி சுழன்று சுழன்று பணியாற்றி வருகின்றனர். ஆனால், வருவாய் பேரிடர் துறை அமைச்சராக உள்ள KKSSR வெள்ள முன்னெச்சரிக்கை பணிகளில் சுணக்கம் காட்டுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. வரும் தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்க திமுக தலைமை ஆர்வம் காட்டவில்லை என்பதால், மக்கள் பணிகளில் சுணக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!