News October 25, 2024
50 பைசாவிற்கு ரூ.15,000 அபராதம் நஷ்ட ஈடு

சென்னை, பொழிச்சலூரில் வாடிக்கையாளருக்கு 50 பைசாவை திருப்பித் தராத தபால் நிலையத்திற்கு, நுகர்வோர் நீதிமன்றம் ரூ.15,000 அபராதம் விதித்தது. சென்னையைச் சேர்ந்த ஒருவர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரெஜிஸ்டர்டு தபால் அனுப்பிய தொகையான ரூ.29.50க்கு பதில் ₹30 செலுத்தியுள்ளார். ஆனால் அங்கு பணிபுரிந்த அலுவலர் மீதம் சில்லறை தராததால் நீதிமன்றத்தை நாடி, ரூ.15,000 நஷ்டஈடு பெற்றுள்ளார்.
Similar News
News August 21, 2025
சென்னை: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

சென்னை மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)
News August 21, 2025
சென்னை: ரூ.5 லட்சம் வரை காப்பீடு!

சென்னை மக்களே, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தை பெற கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது <
News August 21, 2025
சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை மாநகராட்சி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையான நாய்களை வீட்டில் வளர்க்ககூடாது. நோய் தடுப்பூசி செலுத்திய நாய்களை மட்டுமே வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும். கழுத்துப்பட்டை, முகமூடி அணியாமல் நாய்களை வெளியே கொண்டு வரக்கூடாது என தெரிவித்துள்ளது. தெருநாய் குறித்த புகார்களை https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம்.