News October 25, 2024
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள்,துணி, நகைக்கடைகள்,தொண்டு நிறுவனங்கள், கூட்டுறவுத்துறை சங்கம் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் புகார் அளிக்கும் வகையில் 4பேர் கொண்ட புகார் குழு 50 சதவீத பெண்கள் இடம்பெறும் வகையில் அமைக்க வேண்டும். தவறினால் ரூ50,000 அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை.
Similar News
News October 22, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி (அக்.22) 220.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில், ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 34 மி.மீ மழையும், போச்சம்பள்ளி 24.1 மி.மீ மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, பர்கூரில் 24 மி.மீ, நெடுங்கல் 16.2 மி.மீ மழையும் பதிவானது. இந்த மழை விவசாய நிலங்களுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
News October 22, 2025
கிருஷ்ணகிரி: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 22, 2025
கிருஷ்ணகிரி: 4 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் அடைப்பு

கிருஷ்ணகிரியை அடுத்த புதிய பாஞ்சாலியூா் யாசின் நகரைச் சோ்ந்த எல்லம்மாள் (50), அவரது மகள் சுசிதா (13) ஆகியோரை கடந்த 26-ஆம் தேதி கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா். இந்த வழக்கில் நவீன்குமாா் (21), சத்தியரசு (24), ரக்ஷித் (21), பருவீதி கிராமத்தைச் சோ்ந்த ஆதி (20) ஆகிய 4 பேரையும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சேலம் மத்திய சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.