News October 25, 2024
கோவை: ரூ.500 செலுத்தினால் ரூ.10 லட்சம் அறிவிப்பு

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டுக்கு ரூ.500 பிரீமியத்தில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு திட்டம், ரூ.700 பிரீமியத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு வழங்குவதாகவும், 18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். தபால்காரர் கொண்டுவரும் ஸ்மார்ட்போன் மூலம் இணையலாம் என கோவை அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
கோவை: 10,000 பேருக்கு உடனடி வேலை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நவ.29-ம் தேதி அன்று G.N.மில்ஸ் அருகே உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 10,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளன. ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு 80563-58107 என்ற எண்ணை அழைக்கவும். (SHARE)
News November 8, 2025
கோவையில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் ரிஸ்வான் (15). இவர் நேற்று முந்தினம் இவரது சகோதரியிடம் ஆம்லெட் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துள்ளார். இதனால் அவரிடம் விளையாட்டாக தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு அறைக்கு சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து சென்று பார்த்தல் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து கடைவீதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 7, 2025
கோவைக்கு மற்றொரு வந்தே பாரத் சேவையை தொடங்கும் மோடி!

கேரள மாநிலம் எர்ணாகுளம்–பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நவம்பர் 8 அன்று காலை 8 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்குகிறார். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயங்கும் இந்த ரயில் சேவை தெற்கு ரயில்வே நேர அட்டவணையுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொங்கு மண்டல பயணிகள் பெரிதும் பயனடைய உள்ளனர்.


