News October 25, 2024
தேனி மாவட்டத்தில் 32 வீடுகள் மழையால் சேதம்

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக இம்மாத தொடக்கத்தில் இருந்து நேற்று(அக்.24) வரை மாவட்டத்தில் மொத்தம் 32 வீடுகள் சேதமடைந்துள்ளன. பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு அரசு பேரிடர் நிதியில் இருந்து தலா ரூ.4 ஆயிரம் வீதம் 19 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 31, 2025
தேனி மக்களே… இன்றே கடைசி…!

தேனி மக்களே பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க இன்று (டிச.31) கடைசி நாளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்றைக்குள் இணைக்க தவறினால் ஜன.1 முதல் பான் எண் செயலிழந்ததாகக் கருதப்படும். அதன்பின் வருமான வரி செலுத்துதல், பண பறிமாற்றம் உள்ளிட்டவை செயல்படாது. எனவே, நீங்கள் உங்களது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்துள்ளீர்களா என்பதை இங்கே <
News December 31, 2025
தேனி: 2 இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டாஸ்!

தேவாரம் பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (26), அஜித்குமார் (25) உள்ளிட்ட 5 பேரை டிச.4.ல் 16 கிலோ கஞ்சாவுடன் போலீசார் கைது செய்தனர். இதில் சிலம்பரசன், அஜித்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி.,சினேஹா பிரியா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இந்நிலையில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
News December 31, 2025
தேனி: முதியவருக்கு அரிவாள் வெட்டு!

போடி அருகே மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலு (62). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அழகுராஜா என்பவருக்கும் பணம் கொடுக்கல் – வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அழகுராஜா, பாலுவை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த பாலு தேனி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அழகுராஜா மீது போடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.


