News October 25, 2024
கால்நடை கணக்கெடுப்பு பணி தொடக்கம்

21வது கால்நடை கணக்கெடுப்பு பணியை இன்று முதல் மேற்கொள்ள உள்ளது. கால்நடை பராமரிப்பு துறை வாயிலாக கரூர் மாவட்டத்தில் 3,78,121 குடியிருப்புகளில் இக்கணக்கெடுப்பை நடத்த 118 கால்நடை கணக்கெடுப்பாளர்கள், 24 கால்நடை மேற்பார்வையாளர்களைக் கொண்டு கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளது. பொதுமக்கள், கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு துல்லியமான விபரங்களை அளித்திட வேண்டும்.
Similar News
News August 19, 2025
கரூர் பெண்களுக்கு மாதம் ரூ.7000!

கரூர் மக்களே.., நமது இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி, வேலை வாய்ப்பு வழங்க மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் ’எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’. இந்தத் திட்டத்தில் எல்.ஐ.சி முகவர்களாக சேரும் பெண்களுக்கு மூன்றாண்டு பயிற்சியுடன் மாதம் ரூ.7000 மற்றும் பாலிசி விற்பனையில் கமிஷனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News August 19, 2025
கரூரில் நாளை முதல் முற்றிலும் இலவசம்!

கரூர் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ’Tally Certified Accountant’ பயிற்சி கரூரிலேயே வழங்கப்படவுள்ளது. நாளை(ஆக.20) தொடங்கவுள்ள இந்தப் பயிற்சிக்கு மொத்தம் 6692 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும், இதில் பயிற்சி பெறுவோருக்கு வேலை வாய்ப்பு உறுதி. இத்தகைய சூப்பர் பயிற்சி குறித்த விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News August 18, 2025
கரூர் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

கரூர் மாநகராட்சி வார்டுகள் 8, 9 (மீனாட்சி மண்டபம், வெங்கமேடு), கரூர் வட்டாரம் KTLOA திருமண மண்டபம் (மண்மங்கலம்), பள்ளப்பட்டி நகராட்சி வார்டுகள் 11, 21 (ஷாதி மஹால்), தெற்கு மந்தை தெரு, க.பரமத்தி மேற்கு ஒன்றியம் அஞ்சூர் ஊராட்சி சமுதாய கூடம், காந்தி நகர் உள்ளிட்ட இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது