News October 25, 2024

இறந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்

image

எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்த புதுச்சேரி அரியாங்குப்பம் சண்முகா நகரை சேர்ந்த வீரமணிகண்டன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சரவணன்குமார், அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கரன் என்கின்ற தட்சணாமூர்த்தி, உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Similar News

News December 7, 2025

புதுச்சேரி: ‘முப்பரிமாணங்கள்’ ஓவியக் கண்காட்சி தொடக்கம்

image

புதுச்சேரி செட்டி வீதியில், தனியார் உணவகத்தில் “முப்பரிமாணங்கள்” ஓவியக் கண்காட்சி தொடங்கியது. இந்நிகழ்வினை தொழிலதிபர் ராமச்சந்திரன், அடி சல்பே நிர்வாகி சுகன்யா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். மேலும் கலைமாமணிகள் ஓவியர் சுகுமாரன், கந்தப்பன் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வு டிச.6-27 வரை இலவசமாக பொதுமக்கள் பார்வைக்கும், விற்பனைக்கும் இருக்கும் என்று தனியார் உணவாக சார்பில் தெரிவித்தனர்.

News December 7, 2025

புதுச்சேரியில் புத்தகக் கண்காட்சி அறிவிப்பு

image

புதுச்சேரி கூட்டுறவு புத்தக சங்கத் தலைவர் பேராசிரியா் ராமலிங்கம், புத்தக கண்காட்சி தேதிகளை அறிவித்தார். மேலும் “29-ஆவது தேசிய புத்தக கண்காட்சி டிச.19-28 ஆகிய தேதிகளில், தனியார் மண்டபத்தில் நடைபெறும். இதில் சுமாா் 60,000க்கும் மேற்பட்ட தலைப்புகளில், புத்தகங்களின் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் கண்காட்சியில் இடம் பெறும் நூல்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

News December 6, 2025

புதுச்சேரி: தவெக பொதுக்கூட்டத்திற்கு 5,000 பேருக்கு அனுமதி

image

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தார். இதையடுத்து புதுச்சேரியில் வரும் 9-ம் தேதி நடைபெறும் விஜய் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் காவல்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

error: Content is protected !!