News October 25, 2024

அக்.25: வரலாற்றில் இன்று

image

*1881 – ஸ்பானிஷ் ஓவியர் பிக்காசோ பிறந்தநாள்.
*1854 – இந்தியாவில் அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.
*1943 – நாஜிக்களுக்கு எதிராக டச்சு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.
*1949 – மா சே துங்கினால் மக்கள் சீனக் குடியரசு நிறுவப்பட்டது.
*1951 – இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1987: கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் பிறந்தநாள்
*2006 – பாண்டிச்சேரியின் பெயர் புதுச்சேரி என மாற்றம் பெற்றது.

Similar News

News January 22, 2026

அரசியலில் ‘விசில்’ சின்னத்தின் வரலாறு

image

அரசியலில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் விஜய்யின் தவெகவிற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருகாலத்தில் சுயேச்சைகளுக்கு வழங்கப்பட்ட ‘விசில்’ இன்று பொதுச் சின்னமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கர்நாடகாவில் 2019-ல் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜுக்கும், தமிழகத்தில் 2021-ல் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகர் மயில்சாமிக்கும் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.

News January 22, 2026

4 நாள்கள் தொடர் விடுமுறை

image

4 நாள்கள் தொடர்ச்சியாக வங்கிகள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஜன.24 (4-வது சனி), ஜன.25. (ஞாயிறு), ஜன.26 (குடியரசு தினம்) ஆகிய 3 நாள்கள் ஏற்கெனவே விடுமுறையாகும். இந்நிலையில், வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே பணி வழங்கக்கோரி ஜன.27-ம் தேதி வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். அதனால், வங்கிக்கு சென்று முடிக்க வேண்டிய பணிகளை நாளைக்குள் முடித்துவிடுங்கள் நண்பர்களே!

News January 22, 2026

5,500 பேரை காத்த ‘ஆம்புலன்ஸ் தாதா’

image

1998-ம் ஆண்டு, ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் கரிமுல் ஹக், தனது தாயை இழந்தார். இனி ஆம்புலன்ஸ் கிடைக்காமல் யாரும் தவிக்கக்கூடாது என முடிவெடுத்தவர், தனது பைக்கை சிறு ஆம்புலன்ஸாக மாற்றினார். முதலுதவி கொடுக்கும் பயிற்சி பெற்றவர், அன்று முதல் 5,500 பேரை காப்பற்றியுள்ளார். மேற்குவங்கத்தை சேர்ந்த இவரை மக்கள் ‘ஆம்புலன்ஸ் தாதா’ என அழைக்கின்றனர். அவருக்கு, 2017-ல் பத்மஸ்ரீ வழங்கி இந்திய அரசு கெளரவித்துள்ளது.

error: Content is protected !!