News October 25, 2024
ரயிலில் இவற்றை எடுத்து வந்தால் 3 ஆண்டு சிறை

ரயில் பயணத்தில் பயணிகள் நலன் கருதி சில பொருள்களை எடுத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன? 1) பட்டாசுகள், வெடிகுண்டுகள் 2) ஸ்டவ் மற்றும் கேஸ் சிலிண்டர் 3) ஆசிட், வாசனை திரவியங்கள் 4) தோள் பொருள் 5) எண்ணெய் மற்றும் க்ரீஸ் தடவப்பட்ட பொட்டலங்கள் ஆகும். இதை மீறி, ரயிலில் அந்தப் பொருள்களை எடுத்து வந்தால் ₹1,000 அபராதம், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
Similar News
News January 15, 2026
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முடிவு தலைகீழாக மாறியது

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளும், காளையர்களும் போட்டாபோட்டி போட்டுக்கொண்டு உள்ளனர். இந்நிலையில், காளையர் பாலமுருகன் ஒரே சுற்றில் (9-வது) 18 காளைகளை அடக்கி அரங்கையே அதிர வைத்துள்ளார். இதனால் ஆட்டம் அப்படியே தலைகீழாக மாற 16 காளைகளை அடக்கிய கார்த்தி 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். சீறும் காளைகளும் திமிலில் திமிர் காட்ட, பாய்ந்து அடக்கிய வளையங்குளம் பாலமுருகனுக்கு வாழ்த்துகள் குவிகிறது.
News January 15, 2026
பொங்கல் நாளிலும் கைது நடவடிக்கையா? அன்புமணி

உரிமைக்காக போராடிய <<18857511>>பகுதிநேர ஆசிரியர்களை<<>> பொங்கல் நாளிலும் போலீசார் கைது செய்து, தனி இடத்தில் அடைத்துள்ளதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறைகளையும், துரோகங்களையும் திமுக அரசு கட்டவிழ்த்து விட்டு வருகிறது. இதற்கு மன்னிப்பே கிடையாது எனக்கூறிய அவர், உடனே ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கவும், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெறவும் வலியுறுத்தினார்.
News January 15, 2026
நகைக் கடன் தள்ளுபடியா?… வந்தாச்சு அப்டேட்

தேர்தலையொட்டி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படுமா என மக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2021-ல் DMK ஆட்சிக்கு வந்ததும் ₹6,000 கோடி மதிப்பிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் நிலுவை விவரங்களை தயார் செய்யும்படி, அதிகாரிகளுக்கு TN அரசு அறிவுறுத்தியுள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.


