News March 18, 2024

பேரனுக்கு ₹240 கோடி பரிசளித்த இன்ஃபோசிஸ் நிறுவனர்

image

இன்ஃபோசிஸ் நிறுவனர், 4 மாத குழந்தையான தனது பேரனுக்கு ₹240 கோடி மதிப்பிலான பங்குகளை பரிசளித்துள்ளார். நாராயண மூர்த்தியின் மகன் ரோஹனுக்கு கடந்த நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, பேரனுக்கு பரிசு வழங்க நினைத்த அவர், தனது நிறுவனத்தின் பங்குகளில் இருந்து 0.04% பங்குகளை (₹240 கோடி) வழங்கியுள்ளார். இதன்மூலம், உலகின் இளம் வயது கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை நாராயண மூர்த்தியின் பேரன் பெற்றுள்ளார்.

Similar News

News September 9, 2025

PHOTO-ஐ பயன்படுத்த கூடாது.. வழக்கு போட்ட ஐஸ்வர்யா ராய்

image

நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சையான செய்திகள் அடிக்கடி வருகின்றன. இந்நிலையில், தனது தனிப்பட்ட தகவல்கள், வணிக ரீதியாகவோ, வேறு எந்த காரணத்துக்காகவோ தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று அவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்துள்ளார். மேலும், தனது அனுமதியின்றி பெயர், போட்டோ, குரல் உட்பட எந்தவொரு விவரத்தையும் பயன்படுத்த ஊடகங்கள், தனிநபர்களுக்கு தடை விதிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

News September 9, 2025

அதிமுகவை ஒன்றிணைக்க அமித்ஷாவிடம் பேசுவது ஏன்?

image

மக்களின் பேராதரவு பெற்ற ஒரு கட்சி பல அணிகளாக பிரிந்திருப்பது அக்கட்சிக்கு பின்னடைவு தான். பிரிந்தவர்களை எப்படி ஒன்று சேர்க்க விரும்புவோர் 1)கட்சியின் மூத்தத் தலைவர்களை, அனுபவஸ்தர்களை அணுகி ஆலோசனை பெறலாம், மத்தியஸ்தம் பேச சொல்லலாம் 2)தொண்டர்களை நேரில் சந்தித்து ஆதரவை திரட்டலாம். ஆனால், அதிமுகவில் எதிர்ப்புக் குரல் எழுப்பும் தலைவர்கள் நேராக ஏன் அமித்ஷாவை சந்திக்கின்றனர்?

News September 9, 2025

செங்கோட்டையன் முடித்த உடன் தம்பிதுரை தொடங்கினார்!

image

தமிழகம் திரும்பியதும் <<17658301>>செங்கோட்டையன்<<>> பேட்டியளித்த சிறிதுநேரத்தில், டெல்லியில் இருந்த தம்பிதுரை பேட்டியளித்தார். அப்போது, தானும் அமித்ஷாவை சந்தித்து பேசினேன் எனவும், செங்கோட்டையன் உடனான சந்திப்பு குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை என்றும் தம்பிதுரை விளக்கம் அளித்தார். மேலும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் பற்றி கருத்துக் கூற முடியாது எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

error: Content is protected !!