News March 18, 2024
பேரனுக்கு ₹240 கோடி பரிசளித்த இன்ஃபோசிஸ் நிறுவனர்

இன்ஃபோசிஸ் நிறுவனர், 4 மாத குழந்தையான தனது பேரனுக்கு ₹240 கோடி மதிப்பிலான பங்குகளை பரிசளித்துள்ளார். நாராயண மூர்த்தியின் மகன் ரோஹனுக்கு கடந்த நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, பேரனுக்கு பரிசு வழங்க நினைத்த அவர், தனது நிறுவனத்தின் பங்குகளில் இருந்து 0.04% பங்குகளை (₹240 கோடி) வழங்கியுள்ளார். இதன்மூலம், உலகின் இளம் வயது கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை நாராயண மூர்த்தியின் பேரன் பெற்றுள்ளார்.
Similar News
News October 31, 2025
அதானி, அம்பானிக்காக பாஜக செயல்படுகிறது: ராகுல் காந்தி

பிஹாரில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மோடி – ராகுல் காந்தி இடையே கடுமையான வார்த்தை போராகவும் மாறியுள்ளது. ஷேக்புராவில் பரப்புரை மேற்கொண்ட ராகுல், பிஹாரில் தொழில்களை தொடங்க பாஜக விரும்பவில்லை என்று குற்றஞ்சாட்டினார். ஏனென்றால், அதானி & அம்பானி போன்றோர் சீன பொருள்களை பிஹார் உள்பட இந்தியாவில் விற்பனை செய்ய பாஜகவினர் விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
News October 31, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 505 ▶குறள்: பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். ▶பொருள்: ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
News October 31, 2025
சச்சின் முதல் அஸ்வின் வரை.. வாழ்த்து மழையில் மகளிரணி

நடப்பு சாம்பியனான ஆஸி.,வை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழைந்துள்ளது இந்திய மகளிர் அணி. முதல் உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள இந்திய அணிக்கு, கிரிக்கெட் ஜாம்பவான்கள் தங்களது வாழ்த்து மழைகளை பொழிந்துள்ளனர். சச்சின், யுவராஜ் சிங், கம்பீர், ரோஹித் சர்மா, அஸ்வின் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். அதேபோல், ஆந்திர CM சந்திரபாபு நாயுடுவும் மகளிர் அணிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.


