News October 25, 2024
இரவு 1 மணி வரை 19 மாவட்டங்களில் மழை

இரவு 1 மணி வரை 19 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, குமரி, நெல்லையில் இடி-மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News January 19, 2026
BREAKING: டெல்லியில் விஜய்.. CBI குறுக்கு விசாரணை!

CBI வளையத்தில் சிக்கியுள்ள விஜய், சற்றுமுன் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் 2-வது நாளாக ஆஜராகியுள்ளார். கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியான வழக்கில் கடந்த 12-ம் தேதி விஜய் அளித்திருந்த வாக்குமூலம் தொடர்பாக இன்று குறுக்கு விசாரணையை நடத்த அதிகாரிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே தவெக நிர்வாகிகள் அளித்த தகவல்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அது விஜய்க்கு பெரும் சிக்கலாக மாற வாய்ப்புள்ளது.
News January 19, 2026
வாக்காளர் பட்டியல்: ஜன.30 வரை அவகாசம் நீட்டிப்பு

TN-ல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 30-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து ECI அறிவித்துள்ளது. SIR பணிகளில் 97 லட்சம் பேர் நீக்கப்பட்ட நிலையில், அவர்களின் மேல்முறையீடு, புதிய வாக்காளர்கள் சேர்ப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று வரை 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், கூடுதலாக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பிப்.17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது.
News January 19, 2026
மிகப்பெரிய ஸ்டாருடன் எப்படி போட்டி போடுவீர்கள்.. சுதா

விஜய் ரசிகர்களை <<18852101>>ரவுடிகள் <<>>என கூறியதற்கு சுதா கொங்கரா கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்நிலையில், தான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகை, நாட்டின் மிகப்பெரிய ஸ்டாருடன் எப்படி போட்டி போட முடியும் என்று விளக்கமளித்துள்ளார். மேலும், ஜன நாயகன் வெளியீட்டுக்கு 2 நாள்கள் மட்டும் இருக்கையில், சென்சார் போர்டு செய்தது தவறு என்றும், எந்த படத்திற்கும் அவ்வாறு நடக்கக்கூடாது எனவும் கூறினார்.


