News October 25, 2024
தமிழகத்தில் புதிதாக 50 லட்சம் பேர் சேர்ப்பு: பாஜக

தமிழகத்தில் புதிதாக 50 லட்சம் பேரை தங்கள் கட்சியில் உறுப்பினர்களாக இந்தாண்டில் சேர்த்து இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தமிழக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பெரும் திரளாக நேரடியாகவும், இணையதளம் வாயிலாகவும் பதிவு செய்து கட்சியில் உறுப்பினராக சேர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 13, 2025
மாணவன் திடீர் மரணம்.. பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி

விழுப்புரத்தில் தனியார் பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது, <<17390065>>11-ம் வகுப்பு மாணவன் மோகன்ராஜ்<<>> திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மாணவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மாரடைப்பிற்கான அறிகுறிகள் தெரியாது என்றும் டாக்டர்கள் குறிப்பிட்டுள்ளனர். இளவயது மாரடைப்பு மரணங்கள் அண்மைகாலமாக அதிகரிப்பது கவலை அளிக்கிறது.
News August 13, 2025
மாலை 6 மணி வரை.. முக்கியச் செய்திகள்

*<<17393654>>தூய்மைப் பணியாளர்கள்<<>> உடனான பேச்சுவார்த்தை தோல்வி.
*கவர்னர் <<17393219>>தேநீர் விருந்தை<<>> புறக்கணித்த கட்சிகள்.
*தீவிரவாத தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் <<17348912>>வீரமரணம்<<>>.
*கவர்னரிடம் இருந்து பட்டம் பெற மறுப்பு: <<17392715>>அண்ணாமலை<<>> சாடல். *Rajini 50: <<17392370>>கமல்<<>> உள்ளிட்டோர் வாழ்த்து. *<<17391491>>ICC<<>> டாப் வரிசையில் கெத்து காட்டும் இந்திய வீரர்கள்.
News August 13, 2025
புலியின் சிறுநீரை விலைக்கு வாங்கும் மக்கள்!

சீனாவில் புலியின் சிறுநீரை விலைக்கு வாங்கிச் செல்லும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் பிங்க்பெங்சியா என்ற உயிரியல் பூங்காதான் புலியின் சிறுநீரை விற்பனை செய்கிறது. புலியின் சிறுநீரால் மூட்டு வலி, சுளுக்கு, தசை வலிகள் குணமாவதாக நம்பப்படுகிறது. ஒரு சிறுநீர் பாட்டில் இந்திய மதிப்பில் ₹600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.