News October 24, 2024
துரோகம் செய்வது ஆண்களா? பெண்களா?

திருமணமான இந்தியர்களில் 55% பேர் குறைந்தது ஒருமுறையாவது தங்கள் துணைவருக்கு துரோகம் இழைத்துள்ளனர் என்றும், இவர்களில் பெண்கள் (56%) தான் அதிகம் எனவும் பிரபல டேட்டிங் ஆப் கிளீடன் முன்பு நடத்திய சர்வேயில் தெரிய வந்தது. இதே ஆப் அண்மையில் நடத்திய சர்வேயில் பங்கேற்ற மணமானவர்களில் 60% பேர், டேட்டிங்கில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். குடும்ப உறவுகளின் பிணைப்பு பலவீனமடைகிறதா.. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
Similar News
News November 28, 2025
எம்மா எம்மா இன்னாமா இது…

புது புது பியூட்டி டிப்ஸ் டிரெண்டாவது வழக்கம். அதுபோல தற்போது பெண்கள் மாதவிடாய் ரத்தத்தை முகத்தில் தடவுவது டிரெண்டாகி வருகிறது. மாதவிடாய் ரத்தத்தில் ஸ்டெம் செல்கள், புரதம் இருப்பதால் இது முகத்தை பொலிவாக்குவதாக இதை செய்பவர்கள் சொல்கின்றனர். ஆனால், ரத்தத்தில் பாக்டீரியாக்கள் அதிகமாக இருப்பதால், இது முகத்தில் Dermatitis எனும் மோசமான நோயை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். SHARE.
News November 28, 2025
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்: ரகுபதி

செங்கோட்டையன் தவெகவை பாஜக கூட்டணிக்கு அழைத்து செல்வார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர், செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல் என்று விமர்சித்துள்ளார். விஜய்யை பாஜக கூட்டணிக்கு அழைத்து செல்லும் அசைன்மென்ட்டிற்காக தான் செங்கோட்டையன் அங்கு அனுப்பப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
News November 28, 2025
நாளை பள்ளிகள் 7 மாவட்டங்களில் விடுமுறை

புயல் காரணமாக கடலூரைத் தொடர்ந்து நாகை, மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவாரூர் மாவட்டத்தை தொடர்ந்து, விழுப்புரத்திலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


