News October 24, 2024
இலவச அரிசிக்கான பணம் நாளை வங்கியில் வரவு வைப்பு

புதுச்சேரி அரசு, குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.1,200, மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.600 அவர்களது வங்கிக் கணக்கில் நாளை வரவு வைக்கப்பட உள்ளது என அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 27, 2026
புதுவை: கேஸ் மானியம் வரவில்லையா? இத TRY பண்ணுங்க!

மத்திய அரசு தகுதியான நுகர்வோருக்கு ஒவ்வொரு ஆண்டும் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்குகிறது. அந்த மானியம் உங்களுக்கு வரவில்லையா? உங்கள் எரிவாயு வழங்குநரின் இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கு Check DBTL Status (அ) Subsidy Status என்பதை க்ளிக் செய்து நுகர்வோர் எண், மொபைல் எண்ணை உள்ளிட்டு மானிய வரவை சரிபார்க்கலாம். மேலும் உங்கள் எரிவாயு நிறுவனத்தின் Toll-Free எண்ணிற்கும் அழைக்கலாம். SHARE NOW.
News January 27, 2026
புதுவை: பொது இடத்தில் ரகளை – 2 பேர் கைது

நிரவி பழைய பள்ளிவாசல் முன்பு 2 பேர் நின்றுகொண்டு அவ்வழியாக செல்வோரை ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவ்வழியாக சென்ற நிரவி போலீசார் அவர்களை எச்சரித்தும், அங்கிருந்து செல்லாததால், காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர்கள் நிரவி பள்ளிவாசல் தெரு அப்துல் ரகுமான், மேலராஜா தெரு முகமது அன்வர் ஷாஜி என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
News January 27, 2026
புதுச்சேரி: செல்போன் பயனாளிகளே உஷார்!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


