News October 24, 2024
தாம்பரம் – ராமநாதபுரம் சிறப்பு ரயில் நவ.30 வரை நீட்டிப்பு

தாம்பரம்-ராமநாதபுரம் இடையே வாரம் மூன்று முறை இயக்கப்படும் சிறப்பு ரயில் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாம்பரம்- ராமநாதபுரம்-தாம்பரம் இடையே வாரம் மூன்று முறை சிறப்பு ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில் சேவை வருகிற 31ஆம் தேதி முடிவடைய இருந்த நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News August 14, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விவரம்

செங்கல்பட்டு மாவட்டம் (13/08/25) இன்று செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
News August 14, 2025
கோவளத்தில் வாட்டர் மெட்ரோ வரப்போகிறது

கொச்சியை போல சென்னை கோவளத்தில் வாட்டர் மெட்ரோ கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
நீர்வளத் துறை (WRD) வாட்டர் மெட்ரோவை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இதன் முதல்கட்டமாக கூவம் நேப்பியர் பாலம் மற்றும் கோவளம் இடையேயான பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுத்து தூர்வாரப்படும். என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
News August 13, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்து காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை இன்று இரவு ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. DSP தலைமையில் அதிகாரிகள் செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம் ஆகிய வட்டங்களில் உள்ள ஒன்பது காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து செல்ல உள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.