News October 24, 2024

எச்சரிக்கையாக இருக்க மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்

image

தீபாவளி பண்டிகை காலம் என்பதால் கடை தெருக்களில், கூட்ட நெரிசல்களில் செல்லும்பொழுது பொதுமக்கள் தாங்கள் அணிந்திருக்கும் நகைகள் மற்றும் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். கூட்டம் மிகுந்த பகுதிகளில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். எனவே எச்சரிக்கையாக இருக்கும்படி நெல்லை மாவட்ட காவல்துறை இன்று (அக்.24) கேட்டுக் கொண்டது.

Similar News

News February 19, 2026

JUST IN திருநெல்வேலி மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், ஏற்கனவே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள் (பிப் 21) நெல்லை மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்வது நல்லது. SHARE IT

News February 19, 2026

நெல்லை: இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

image

தற்போது உள்ள டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. இதில் தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News February 19, 2026

நெல்லை – ஹைதராபாத் ரயில் சேவை நீட்டிப்பு

image

நெல்லை வழியாக கன்னியாகுமரியில் இருந்து ஹைதராபாத் வரை வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை மார்ச்.6 முதல் மார்ச்.27 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் (எண் 07230) மார்ச்.4 முதல் மார்ச்.25 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

error: Content is protected !!