News October 24, 2024
பணக்காரங்களுக்கு மட்டும்தான் கோவிலா?: நீதிமன்றம்

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் கூடுதல் கட்டண விவகாரத்தில், பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோவிலா என ஐகோர்ட் மதுரை கிளை காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. சாமி தரிசனத்திற்கு 1000, 2000 என வாங்கினால் ஏழைகள் எப்படி சாமி தரிசனம் செய்வார்கள் எனவும், ஏழைகள் சாமி கும்பிட கூடாதா எனவும் நீதிபதிகள் வினவியுள்ளனர். மேலும், அறநிலையத்துறை ஆணையர் பதில் மனுத்தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.
Similar News
News January 21, 2026
BREAKING வெள்ளியங்கிரி மலை ஏற அனுமதி!

தென் கைலாயம் என்று அழைக்கப்படும் கோவை பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு, ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் ஏராளமான பக்தர்கள் ஏழுமலைகளை ஏறிச்சென்று, சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பிப்.1 ஆம் தேதி முதல் பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி அளித்துள்ளது. தற்போது மலை ஏறும் பக்தர்களுக்காக ஏற்பாடுகளை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
News January 21, 2026
வெறுப்பு கருத்துகளை பேசுகிறார் உதயநிதி: கோர்ட்

சனாதன தர்மத்துக்கு எதிராக உதயநிதி வெறுப்பு கருத்துகளை பேசுவதாக சென்னை HC மதுரை கிளை சாடியுள்ளது. 2023-ல் சனாதனம் பற்றி பேசிய வழக்கை விசாரித்த கோர்ட், இந்து மதத்தின் மீது திகவும், திமுகவும் கடந்த 100 ஆண்டுகளாக தாக்குதல் நடத்துகின்றன என கூறியுள்ளது. மேலும், வெறுப்பு கருத்தை பேசுபவர்கள் தப்பித்துவிடுவதாகவும், அதனை எதிர்ப்பவர்களே தண்டிக்கப்படுவதாக கூறி அமித் மாளவியா மீதான வழக்கை ரத்து செய்துள்ளது.
News January 21, 2026
இனி ரயில்வே ஸ்டேஷன்களில் ₹14 தான்!

ரயில்வே ஸ்டேஷன்களில் ‘<<17789708>>ரயில் நீர்<<>>’ 1 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் ₹14-க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், விற்பனையாளர்களிடம் ‘ரயில் நீர்’ பாட்டில்கள் காலியானால், மற்ற தண்ணீர் பாட்டில்களையும்(Aquafina, Bisleri) ₹14-க்குதான் விற்க வேண்டும் என தற்போது IRCTC உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அதிக விலைக்கு விற்பனை செய்தால், 139 என்ற ரயில்வே உதவி எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.


