News March 18, 2024
விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் எச்சரிக்கை

விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் வெளியிட்ட செய்தி குறிப்பில், சமூக வலைதளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக வீண் வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படியான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மேலும் தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ பகிரப்படும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 18, 2025
பள்ளி சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

விருதுநகரை சேர்ந்த பள்ளி சிறார்கள் இருவரை பிளக்ஸ் பேனர் அமைக்கும் பணிக்காக அழைத்து வந்த சிவகாசி ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்த சாம் டேவிட் (25) என்பவர் மாணவர்களுக்கு குளிர்பானத்தில் போதை மாத்திரையை கலந்து கொடுத்து இருவரையும் நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை அளித்ததாக அவர் மீது ஏப்.15 அன்று போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் கோவையில் பதுங்கி இருந்த சாம் டேவிட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.
News April 18, 2025
விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்கள்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த கல்லூரி மாணவர்களான இந்திரகுமார் (21), லோகேஷ் (20) இருவரும் சிவகாசியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக ஏப்.16ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது வெம்பக்கோட்டை அருகே மடத்துப்பட்டியில், இருவரும் சென்ற பைக் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
News April 17, 2025
விருதுநகரில் சிறந்த பாடலுக்கு ரூ.50,000 பரிசு

சர்வதேச கூட்டுறவு ஆண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட பொதுமக்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், துறை அலுவலர்களிடமிருந்து கூட்டுறவு பற்றிய தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பாடல், இசையமைக்கப்பட்டு, 5 நிமிடங்கள் ஒலிப்படப்ப கூடிய வரையில் இருக்க வேண்டும். இதில், சிறந்த பாடலுக்கு ரூ.50,000 பண முடிப்பு வழங்கப்படும். பாடலை tncu08@gmail.com மின்னஞ்சலில் மே 30க்குள் அனுப்ப வேண்டும்.