News October 24, 2024
காதல் தோல்வியால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 19). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். காதல் தோல்வி அடைந்ததால், விரக்தி அடைந்த முகமது அப்பாஸ் அம்பேத்கர் நகர் மரத்தில் லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை சுப்பிரமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News January 25, 2026
திருச்சி: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News January 25, 2026
திருச்சி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News January 25, 2026
திருச்சி: ஒரே ஆண்டில் 849 வழக்குகள்

திருச்சி ரயில்வே காவல் நிலையம் பிச்சாண்டார்கோவில், மணப்பாறை, குமாரமங்கலம், சோழகம்பட்டி ஆகிய ரயில் நிலையங்களை எல்லைகளாக கொண்டு இயங்கி வருகிறது. இக்காவல் நிலையத்தில் கடந்த 2025-ம் ஆண்டு நகை திருட்டு வழக்கு, வழிப்பறி, கைபேசி திருட்டு வழக்குகள் என மொத்தம் 849 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர் கண்காணிப்பின் காரணமாக குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக ரயில்வே காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


