News March 18, 2024

கடலூர்: மின்சாரம் பாய்ந்து 6 பேர் காயம்

image

கடலூர் மாவட்டம் அடுத்து கீழ்ச்செருவாய் கிராமத்தில் இன்று(மார்ச்.18) உயிரிழந்த முருகானந்தம் என்பவரது உடலை வைத்திருந்த ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் மின்சாரம் தாக்கி காயமடைந்த கனகவல்லி, ராஜம்மாள், லலிதா, கௌரி உள்ளிட்டோருக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Similar News

News April 13, 2025

கடலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்றும் தமிழகத்தில் இரவு 7 மணி வரை ஒரு சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடலூரில் லேசான மழை முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் எச்சரிக்கையுடனும் பாதுகாப்பாகவும் இருக்க அறிவுருத்தப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க

News April 13, 2025

குள்ளாஞ்சாவடி அருகே டிரைவரை தாக்கி பணம் பறிப்பு

image

திண்டிவனத்திலிருந்து குறிஞ்சிப்பாடிக்கு ஜல்லி ஏற்றிக்கொண்டு லாரியை தம்பிப்பேட்டையில் சாலையோரம் லாரி டிரைவர் நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் லாரியின் கண்ணாடியை உடைத்தும், டிரைவரை தாக்கியும் மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் டிரைவரின் செல்போன் மற்றும் ரூ.25,000 பணத்தை பறித்து சென்றனர். தொடரும் இந்த சம்பவம் லாரி டிரைவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News April 13, 2025

கடலூரில் மாவட்டத்தில் 102.56 டிகிரி வெயில் பதிவு

image

கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று 102.56 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் கடலூர் பகுதியில் பல்வேறு இடங்களில் சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் வெளியில் செல்லும் போது குடை மற்றும் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு SHARE பண்ணுங்க..

error: Content is protected !!