News October 24, 2024
செங்கல்பட்டில் வரும் 26ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், செங்கல்பட்டு பகுதியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி, மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூரில் உள்ள லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News August 9, 2025
செங்கல்பட்டு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை திறப்பு

செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தாம்பரம் சானடோரியம் பகுதியில் ரூ.145.41 கோடி செலவில் 400 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய மருத்துவமனையை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து, மருத்துவமனையின் உள் கட்டமைப்புகளை அவர் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
News August 9, 2025
செங்கல்பட்டு: MRPஐ விட அதிக விலையா? இதை பண்ணுங்க

பேருந்து நிலையங்கள், சாலையோர மோட்டல்களில் உணவு பொருட்களை MRPஐ விட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். MRPஐ விட கூடுதல் விலைக்கு விற்பது, எக்ஸ்பயரி தேதி மாற்றி வைப்பது, வேறு ஸ்டிக்கரை அதன்மேல் ஒட்டி வைப்பது போன்றவற்றை கண்டால் FSSAIன் 9444042322 வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம் (அ) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350924>>தொடர்ச்சி<<>>
News August 9, 2025
செங்கல்பட்டு: MRPஐ விட அதிக விலையா? இதை பண்ணுங்க

FSSAI (அ) மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யும் முன் அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். வீடியோ/ புகைப்பட ஆதாரங்கள், பொருளை வாங்கியதற்கான ரசீது , கடையின் முழுமையான முகவரி போன்ற ஆதாரங்களோடு புகார் செய்யும் போது அதிகாரிகள் உரிய விசாரணை செய்து கடையின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.