News October 24, 2024

வாயாடி பெத்த புள்ளையா இது?

image

சிவகார்த்திகேயனின் மகளான ஆராதனா நேற்று தனது 11 பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி, இணையத்தில் அவரது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அவற்றை பார்த்த பலரும் நமக்கு அவ்வளவு வயதாகிவிட்டதா? என்று புலம்பும் அளவுக்கு குழந்தையாக பார்த்த ஆராதனா, தற்போது தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கிறார். 2018ல் வெளியான கனா படத்தில் ‘வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடலை மழலை குரலில் பாடி நம் வீட்டு தேவதையாக மனதைக் கவர்ந்தார்.

Similar News

News November 4, 2025

கண்ணதாசன் பொன்மொழிகள்!

image

*அளவுக்கு மிஞ்சிய சாமர்த்தியம், முட்டாள்தனத்தில் போய் முடியும். *நிலத்தில் வரும் களைகள் பெரிய மரங்களாவதில்லை, அற்ப ஆசைகள் பெரிய வெற்றியை தேடித் தருவதில்லை. *எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், சம்பாதித்த பணத்தை அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள். *துன்பங்களை வளர்ப்பதும் தனிமைதான். தணிப்பதும் தனிமைதான். *அதிர்ஷ்டத்தின் மூலம் அறிவைப் பெற முடியாது, அறிவின் மூலம் அதிர்ஷ்டத்தை பெறலாம்.

News November 4, 2025

BREAKING: கோவை சம்பவத்தில் 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்

image

கோவையில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை தனிப்படை போலீசார் சுட்டுப்பிடித்தனர். CCTV காட்சிகளின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்திய தனிப்படை போலீசார் குணா தவசி, சதீஸ், கார்த்திக் காளீஸ்வரன் ஆகியோரை துடியலூர் பகுதியில் சுற்றி வளைத்தனர். தாக்குதல் நடத்தி 3 பேரும் தப்பிக்க முயன்றதால் காலில் சுட்டுப்பிடித்ததாக போலீஸ் கூறுகிறது. 3 பேரும் கோவை அரசு ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

News November 4, 2025

நடிகர்கள் அரசியலில் நடிக்க கூடாது: சரத்குமார்

image

அரசியலுக்கு வரும் நடிகர்கள் மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என சரத்குமார் தெரிவித்துள்ளார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதால் நடிகர்களும் அரசியலுக்கு வரலாம் என்றும், ஆனால் அதிலும் நடிக்க கூடாது எனவும் அவர் பேசியுள்ளார். அவர்களின் தகுதி, பேசும் விஷயங்கள், அவற்றை செயல்படுத்தும் திறன் உள்ளதா? எதற்காக அரசியலுக்கு வருகின்றனர் என்பதை மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

error: Content is protected !!