News October 24, 2024

குப்பை கொட்டும் நபர்களைக் கண்காணிக்க AI கேமரா

image

பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களைக் கண்காணிக்க AI தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்களை பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விதிகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் ரூ. 18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் பெருமளவு திடக்கழிவு கொட்டுவோர் விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது.

Similar News

News February 14, 2026

சென்னை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 14, 2026

சென்னை: இளம்பெண்ணிற்கு முதியவர் பாலியல் தொல்லை!

image

வில்லிவாக்கம், இராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண், கடந்த பிப்.10ஆம் தேதி பாபா நகர் ஜிம்மில் பயிற்சி முடித்து வீடு திரும்பும் வழியில், இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர், முகவரி கேட்பது போல் நடித்து தவறாக நடந்ததாக புகார் அளித்தார். இதுகுறித்து V-4 இராஜமங்கலம் போலீசார், கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் (72) என்பவரை நேற்று(பிப்.13) கைது செய்தனர்.

News February 14, 2026

சென்னை: காதலர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

image

உலகம் முழுவதும் இன்று(பிப்.14) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆகையால், மெரினா, கிண்டி பூங்கா, திரையரங்குகள் போன்ற இடங்களில் காதலர்கள் கூடுவர் இந்நிலையில், காதலர் தினத்தில் வழக்கமாக போராட்டங்கள் செய்யும் இந்து அமைப்புகள், இயக்கங்கள், காதலர்களை அச்சுறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பொது இடங்களில் எல்லை மீறும் ஜோடிகள் மீதும் போலீஸ் நடவடிக்கை பாயும்.

error: Content is protected !!