News March 18, 2024
பீதியில் அரசியல் கட்சியின் நிர்வாகிகள்

போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக் தொடர்பிலிருந்த அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் அச்சத்தில் உள்ளார்களாம். அவருக்கு ஃபைனான்ஸ் செய்த மலேசியப் பிரமுகர் ஒருவர் தற்போது அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அடிப்படைவாத அமைப்பு ஒன்றுக்கு அவர், நிதி உதவி செய்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த அரசியல் கட்சியினர் பீதியில் உள்ளனராம்.
Similar News
News November 18, 2025
இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. முக்கியமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் , தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 23-ம் தேதி வரை மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
News November 18, 2025
இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. முக்கியமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் , தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 23-ம் தேதி வரை மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
News November 18, 2025
குற்றவாளிகள் நரகத்திலும் தப்ப முடியாது: அமித்ஷா

மோடியின் அரசு பயங்கரவாதத்தை வேர்களிலிருந்து ஒழிப்பதில் உறுதியாக உள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, கடுமையான தண்டனையை சட்டத்தின் மூலம் எதிர்கொள்வார்கள் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் குற்றவாளிகள் நரகத்தில் இருந்தாலும் விடமாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஹரியானாவின் பரீதாபாத்தில் நடத்த நிகழ்ச்சியில் இவ்வாறு அமித்ஷா பேசியுள்ளார்.


