News March 18, 2024
பீதியில் அரசியல் கட்சியின் நிர்வாகிகள்

போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக் தொடர்பிலிருந்த அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் அச்சத்தில் உள்ளார்களாம். அவருக்கு ஃபைனான்ஸ் செய்த மலேசியப் பிரமுகர் ஒருவர் தற்போது அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அடிப்படைவாத அமைப்பு ஒன்றுக்கு அவர், நிதி உதவி செய்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த அரசியல் கட்சியினர் பீதியில் உள்ளனராம்.
Similar News
News April 7, 2025
5ஆம் வகுப்பு வரை இன்று முழு ஆண்டு தேர்வு தொடக்கம்

கோடை வெயில் காரணமாக, 1 – 5 ஆம் வகுப்புகளுக்கு இறுதி பருவத் தேர்வு இன்று முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி, 1,2,3ஆம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் 12 மணி வரையும், 4,5ஆம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் 4 மணி வரையும் தமிழ் உட்பட மொழிப்பாட தேர்வுகள் நடைபெறவுள்ளன. 1-3ஆம் வகுப்புக்கு ஏப்.12ஆம் தேதியும், 4-5ஆம் வகுப்பு ஏப்.18ஆம் தேதியும் கோடை விடுமுறை தொடங்கவுள்ளது.
News April 7, 2025
ஹாஸ்பிடலில் SRH பவுலர்!

SRH பவுலர் ஹர்ஷல் படேல், நோய் பாதிப்பின் காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், அவருக்கு கரெக்ட்டாக என்ன பிரச்னை என்ற தகவல் ஏதும் இல்லை. இதனால்தான் அவர், GT அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கவில்லை. IPL ஏலத்தில் ₹8 கோடிக்கு ஹர்ஷல் படேலை SRH வாங்கியது. பவுலிங்கில் தடுமாறி வரும் SRHல், அவர் விளையாடி இருக்க வேண்டும் என SRH ஃபேன்ஸ் பறிதவித்து வருகின்றனர்.
News April 7, 2025
ராகுலுக்கு கேரள பாஜக கண்டனம்!

பாஜக, RSSன் பார்வை சர்ச் நிலங்கள் மீது திரும்பியிருப்பதாக ராகுல் காந்தி கூறியிருந்தார். முதலில் அரசமைப்பை நன்கு படியுங்கள் என கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ரயில்வே, தேயிலை தோட்ட உரிமையாளர்கள் போல சொந்தமாக நிலங்கள் வைத்திருப்பது தவறல்ல. கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் போல மக்களிடம் இருந்து பறிப்பதுதான் தவறு. அதைதான் வக்பு வாரியம் செய்தது என விமர்சித்துள்ளார்.