News October 24, 2024
6 பேரிடம் ரூ.42 லட்சம் மோசடி

புதுச்சேரி காட்டேரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பொதுப்பணித்துறை பல்நோக்கு ஊழியர் கென்னடி. இவர் அரசு வேலை வாங்கி தருவதாக ஆறு பேரிடம் ரூபாய் 42 லட்சம் மோசடி செய்துள்ளார். மேலும் பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டபோது பணத்தை கொடுக்காமல் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்கள் ரெட்டியார் பாளையம் போலீசில் புகாரை அடுத்து பல்நோக்கு ஊழியர் கென்னடியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Similar News
News February 12, 2026
புதுச்சேரி: அரசு பணியாளர் தலைவர் சிறையில் அடைப்பு

புதுச்சேரியில் அரசு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை முற்றுகையிட முயன்ற அரசு பணியாளர் நல கூட்டமைப்பின் தலைவர் சரவணன் மீது, உருளையன்பேட்டை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி சரவணன் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News February 12, 2026
புதுச்சேரி: டிகிரி போதும் – வேலை ரெடி

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 12, 2026
புதுவை: அரசு பணிகளுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

புதுவை, தேர்வு ஆணையம் அரசு பணிகளுக்கு தேர்வு அட்டவணை நேற்று வெளியிட்டுள்ளது. ஜூனியர் நூலக உதவியாளர், தொகுப்பு (கேலரி) உதவியாளர்களுக்கான ஒருங்கிணைந்த 2-ம் நிலைத் தேர்வு ஏப்ரல் 26-ம் தேதி நடக்கிறது. எல்.டி.சி., ஓவியர் பணிக்கான ஒருங்கிணைந்த மேல்நிலைத் தேர்வு முதல் தாள் வரும் 31-ம் தேதி காலையும், 2-ம் தாள் மதியமும் நடக்கிறது. ஓவியருக்கான திறன் தேர்வு ஜூன் 7-ம் தேதி காலை நடக்க உள்ளது.


