News March 18, 2024
லாரி தலைகுப்புற கவிழ்ந்து 6 பேர் படுகாயம்

கடம்பூரை அடுத்த கோட்டமாளத்தில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிய லாரியை இன்று மணிகண்டன் (45) என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் கோட்டமாளத்தில் இருந்து சிறிது தூரம் சென்றபோது லாரி திடீரென நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News October 18, 2025
ஈரோடு இரவு ரோந்து காவலர் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 18, 2025
ஈரோடு அருகே வாய்க்காலில் விழுந்து ஒருவர் பலி

ஈரோடு, பெருந்துறையை அடுத்த வீரச்சிபாளையத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி (67). கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் நேற்று முந்தினம் பாலக்கரை அருகில் கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்துள்ளார். இதில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News October 18, 2025
ஈரோடு: பைக்,கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

ஈரோடு மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே இங்கே <