News October 24, 2024
ஆற்காடு அருகே 22 சவரன் நகை பறிமுதல்

ஆற்காடு டவுன் போலீசார் நேற்று இரவு அண்ணா சிலை அருகில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே பைக்கில் வந்த மூன்று வாலிபர்களை நிறுத்தி விசாரித்ததில் மேல்விஷாரத்தைச் சேர்ந்த நவீன், ஐயப்பன் மற்றும் 16 வயதுடைய சிறுவன் ஆகியோர் பல்வேறு இடங்களில் திருடியது தெரிந்தது. அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 22 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
Similar News
News October 16, 2025
ராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி நாளை அக்.17ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 10th,12th, டிப்ளமோ, ஐடிஐ முடித்தோர், மற்றும் பட்டதாரிகள் <
News October 16, 2025
சைபர் குற்றச்செயல்களுக்கு எச்சரிக்கை செய்த காவல்துறை

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு சைபர் குற்றச்செயல்களை தவிர்க்க எச்சரிக்கை விடுத்துள்ளது. அறியப்படாத தொலைபேசி அழைப்புகள், செய்திகள் அல்லது இணைய தளங்களின் வழியாக பணம் கோரும் நபர்களை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டது. ஏதேனும் சந்தேகமான செயல்கள் ஏற்பட்டால் உடனே 1930 என்ற எண்னில் தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
News October 16, 2025
ராணிப்பேட்டை: G Pay / PhonePe பயனாளர்கள் கவனத்திற்கு!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!