News October 24, 2024

4,08,636 பனை விதை நட்டு விழுப்புரம் முதலிடம்

image

தமிழகத்தில், 1 கோடி பனை விதைகள் நடும் திட்டத்தில், இதுவரை 1,068 தன்னார்வலர்கள் பங்கேற்புடன் 4,08,636 பனை விதைகள் நட்டு விழுப்புரம் மாவட்டம் முதல் இடத்தையும், 3,094 தன்னார்வலர்கள் பங்கேற்புடன் 3,77,581 பனை விதைகள் நட்டு நாமக்கல் மாவட்டம் இரண்டாமிடத்தையும், 828 தன்னார்வலர்கள் பங்கேற்புடன் 32,713 பனை விதைகள் நட்டு செங்கல்பட்டு மாவட்டம் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News December 27, 2025

விழுப்புரம்: மருத்துமனையில் ஆண் சடலம்!

image

விழுப்புரம்: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பார்வையாளர்கள் தங்குமிடத்தில், 70 வயது ஆண் நபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். அவர் யார் என்று அடையாளம் தெரியாத நிலையில், முண்டியம்பாக்கம் விஏஓ அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.

News December 27, 2025

விழுப்புரத்தில் 587 பேர் பலி!

image

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் இதுவரை, மொத்தம் 2,732 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில், 587 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3,183 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து எண்ணிக்கை கடந்த ஆண்டை விட சற்று குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2026ல் வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி விபத்துகளை தவிர்க்க மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

News December 27, 2025

விழுப்புரம்: இயற்கை உபாதை கழிக்க சென்றவர் பலி!

image

விழுப்புரம்: ஆலகிராமத்தை சேர்ந்த அருள் குமார் (32), நேற்று அதிகாலை, இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து அவரை பிணமாக மீட்டனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!