News March 18, 2024

நத்தம் அருகே அரசு பேருந்து மோதி இளைஞர் பலி

image

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஏரக்காபட்டி பகுதியில் (மார்ச் 18 ) இன்று காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூங்கில்பட்டியை சேர்ந்த அழகு பாண்டி என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்து வந்த நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News July 6, 2025

மாற்றுத்திறனாளிகள், முதியோர் நலன்களுக்கான சிறப்பு முகாம்!

image

திண்டுக்கல் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் & முதியோர் நலன்களுக்கான சிறப்பு முகாம் 07.07.2025 குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி, 08.07.2025 பழனி சிவகிரிப்பட்டி எஸ்கேஎம் மஹால், 09.07.2025 தொப்பம்பட்டி வீரகுமார் திருமண மண்டபம். 10.07.2025 அன்று வேடசந்தூர் சினேகா மஹால், 11.07.2025 வத்தலகுண்டு ஏஎம்எஸ் மஹால், 12.07.2025 திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி சபரி மஹால் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.

News July 6, 2025

திண்டுக்கல் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூலை 5 இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது,

News July 5, 2025

ஏவல், பில்லி சூனியம் நீக்கும் திண்டுக்கல் கோயில்!

image

திண்டுக்கல், வேடசந்தூரில் அழகிய நாகம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள மக்களுக்கு வேண்டிய வரம் தந்து காத்து அருள்கிறாள் நாகம்மன். சுமார் 400 ஆண்டுகள் முன்பு கோயில் தோன்றியது. ஏவல், பில்லி சூனியங்களை நீக்கும் உன்னத தெய்வமாக நாகம்மன் உள்ளார். கோயிலின் தல விருட்சமாக வேம்பும், அரசும் உள்ளது. தல விருட்சத்தை சுற்றிவந்து மாங்கல்யம் கட்டி தொங்க விட்டால் திருமணத்தடை விலகும், திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

error: Content is protected !!