News October 24, 2024

விசிக மாவட்ட நிர்வாகம் கூண்டோடு கலைப்பு

image

விசிகவில் 234 சட்டசபை தொகுதிகளிலும் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதனால், தற்போதைய மாவட்ட நிர்வாகம் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. தமிழக கட்சிகளில், அதிக மாவட்ட செயலாளர்கள் கொண்ட கட்சி இதுவாகும். இந்நிலையில், கட்சியின் மாவட்ட நிர்வாகங்கள் கலைக்கப்பட்டு, மறுசீரமைப்பு பணிகள் நடக்கின்றன. ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் 3 வாரங்களில் முடிக்கப்பட உள்ளன.

Similar News

News November 8, 2025

தமிழ்நாட்டில் இருந்து இந்த சட்டமன்ற தொகுதி நீக்கமா?

image

ECI-ன் அதிகாரப்பூர்வ ‘ECINET’ செயலியில் உடுமலை தொகுதி(125) இடம் பெறாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. SIR பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் தங்களது விவரங்களை ஆன்லைன் மூலம் சரிபார்த்து வருகின்றனர். ஆனால், திருப்பூர் மாவட்ட பட்டியலில் ‘Search your name in voter list’-ல் அவிநாசி, தாராபுரம், காங்கேயம், மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர்(வ), திருப்பூர்(தெ) மட்டுமே உள்ளன.

News November 8, 2025

பெட்டிக் கடைகளில் SIR படிவங்கள் விநியோகம்: அதிமுக

image

SIR படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக வழங்காமல் பெட்டிக் கடைகளில் கொடுத்து விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக MP இன்பதுரை குற்றஞ்சாட்டியுள்ளார். வாக்காளர் பட்டியல் நேர்மையாக இருந்தால்தான் தேர்தலும் நேர்மையாக நடக்கும். ஆனால், கடைகளில் SIR படிவம் விநியோகம் செய்தால், எப்படி தேர்தல் நேர்மையாக நடக்கும் எனக் கேள்வி எழுப்பிய அவர், இதற்கு பின்னால் DMK இருப்பதாக விமர்சித்துள்ளார்.

News November 8, 2025

National Roundup: சபரிமலையில் செயற்கை குங்குமத்திற்கு தடை

image

*கர்நாடகாவில் ஒரு டன் கரும்பு 3,300-க்கு கொள்முதல் செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு. *டெல்லியில் காற்று மாசினால் அரசு அலுவலகங்களின் பணி நேரம் காலை 10 மணி-மாலை 6.30 மணியாக மாற்றம். *சபரிமலையில் ஷாம்பு, செயற்கை குங்குமம் விற்க தடை விதிப்பு. *எர்ணாகுளம்-பெங்களூரு உள்ளிட்ட 4 வந்தே பாரத் ரயில் சேவைகளை PM மோடி இன்று தொடங்கி வைக்கிறார். *அரசு முறை பயணமாக ஜனாதிபதி இன்று ஆப்ரிக்க நாடுகளுக்கு பயணம்.

error: Content is protected !!