News October 24, 2024

தஞ்சையிலிருந்து குமரி வந்த 1,350 டன் ரேசன் அரிசி

image

குமரி மாவட்ட பொது விநியோக திட்டத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ரேசன் பொருட்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று(அக்.,23) காலை தஞ்சாவூரில் இருந்து 1,350 டன் ரேசன் அரிசி மூடைகள் ரயில் மூலம் நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. சரக்கு ரயிலில் 35 வேகன்களில் இந்த அரிசி வந்தது. பின்னர் லாரிகளில் ஏற்றி குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

Similar News

News November 12, 2025

குமரி: குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

image

தக்கலை அருகே காட்டாத்துறை அடுத்து கீழ மஞ்சாடியைச் சேர்ந்தவர் தோமஸ் (72).கூலி தொழிலாளியான இவருக்கு சொந்தமான தோப்பில் தேங்காய் வெட்டியுள்ளனர். அப்போது அங்குள்ள குளத்தில் ஒரு சில தேங்காய்கள் விழுந்துள்ளன. அதை எடுப்பதற்காக தாமஸ் நீந்தி சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தக்கலை போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 12, 2025

குமரி: VOTER ID-யில் இதை மாற்ற வேண்டுமா?

image

குமரி மக்களே உங்க VOTER ID-ல் பழைய போட்டோ இருக்கிறதா? அதை மாற்ற வழி உண்டு.
<>இங்கு கிளிக் <<>>செய்யுங்க.
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும். இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க

News November 12, 2025

குமரி: 2696 மாணவர்களுக்கு கண் குறைபாடு – அதிர்ச்சி தகவல்

image

அரசின் பள்ளி சிறார் காணொளி திட்டத்தின் மூலம் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கண்பரிசோதனை செய்யப்பட்டு கண்ணாடிகள் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில் 39096 சிறுவர்கள் பரிசோதிக்கப்பட்டதில் 2696 மாணவர்களுக்கு கண் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் செல்போன் பயன்பாடா? வைட்டமின் குறைபாடா? என்பது பற்றி மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

error: Content is protected !!