News October 24, 2024
டாஸ்மாக் முன் செல்ஃபி.. போலீசாருக்கு புதிய உத்தரவு

பணியிடத்தில் சீருடையுடன் செல்ஃபி எடுத்து உயரதிகாரிக்கு அனுப்ப போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒதுக்கப்படும் பணியிடங்களுக்கு போலீசார் குறித்த நேரத்தில் செல்வதில்லை என புகார்கள் எழுகின்றன. இதனால், பணியிடங்களுக்கு உரிய நேரத்திற்கு சென்று செல்ஃபி எடுத்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், 10 மணிக்கு TASMAC கடை மூடியதும் அதன் முன்பு செல்ஃபி எடுத்து உயரதிகாரிகளுக்கு அவர்கள் அனுப்புகின்றனர்.
Similar News
News August 12, 2025
‘கூலி’ ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி!

ரஜினியின் கூலி படத்தின் ஸ்பெஷல் ஷோவுக்கு TN அரசு அனுமதி வழங்கியுள்ளது. வரும் 14-ம் தேதி காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணிக்குள் 5 காட்சிகளை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 7,500 ஸ்கிரீன்களில் திரையிடப்படவுள்ள கூலி படத்தின் புக்கிங் கடந்த 8-ம் தேதி தொடங்கிய நிலையில், பல இடங்களில் ஒரு டிக்கெட் ₹2,000-க்கு விற்கப்படுவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News August 12, 2025
உருவாகிறது புயல் சின்னம்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை

வடமேற்கு வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், மீனவர்களுக்கு IMD எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று முதல் ஆக., 15 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News August 12, 2025
பாட்டிலுக்கு இனி ₹10 அதிகம்.. மது பிரியர்கள் கவனத்திற்கு..!

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நவம்பருக்குள் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், மது பாட்டிலுக்கு ₹10 கூடுதலாக வசூலிக்கப்படும். காலி பாட்டில்களை திரும்பக் கொடுத்து அந்த ₹10-ஐ மீண்டும் பெற்றுக் கொள்ளலாம். நீலகிரி மாவட்டத்தில் ஏற்கெனவே இந்த திட்டம் அமலில் உள்ளது. காலி மது பாட்டிலை திரும்பப் பெறுவது பற்றி என்ன நினைக்கிறீங்க?