News October 24, 2024
யாராலும் இந்தியாவை புறக்கணிக்க முடியாது: நிர்மலா

உலக வங்கி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அவர் பேசுகையில், “இன்று உலக அளவில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது. ஆனால், இதை பயன்படுத்தி யார் மீதும் இந்தியா ஆதிக்கம் செலுத்தாது. மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், பொருளாதார சக்தியாகவும் இந்தியா இருக்கிறது. எனவே, அமெரிக்காவோ, சீனாவோ யாராலும் இந்தியாவை புறக்கணிக்க முடியாது” என பெருமிதத்துடன் பேசினார்.
Similar News
News October 14, 2025
தரைமட்டமான வீடுகள்.. தவிக்கும் பாலஸ்தீனியர்கள்

இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும் பாலஸ்தீனியர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப பல ஆண்டுகள் ஆகலாம் என்பதை மேற்காணும் புகைப்படங்கள் உணர்த்துகின்றன. தெற்கு காஸா பகுதியில் 90% வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. சொந்த இடங்களுக்கு பாலஸ்தீனியர்கள் திரும்பினாலும் தங்குவதற்கு வீடுகள் இன்றி தவிக்கின்றனர். SWIPE செய்து புகைப்படங்களை பார்க்கவும்.
News October 14, 2025
பிஹாரில் காங்கிரஸ் சுருங்கியது எப்படி?

பிஹாரை நீண்டகாலம் ஆண்ட காங்கிரஸ் கட்சி, ஆட்சியை இழந்து 35 வருடங்கள் ஆகின்றன. சோசலிஸ்ட் RM லோஹியா தலைமையிலான ஓபிசி எழுச்சியில், 67-ல் முதல்முறையாக காங்., ஆட்சியை இழந்தது. ஓபிசி, முஸ்லிம், தலித் என காங்., வாக்குவங்கியை வசப்படுத்திய லாலு காங்கிரஸை வீழ்த்தி 90-களில் அரியணை ஏறினார். அதன்பின், கோஷ்டி பூசல், டெல்லி தலையீடு போன்றவை காங்.,கை RJD, JD(U), BJP கட்சிகளுக்கு அடுத்த இடத்துக்கு தள்ளியுள்ளன.
News October 14, 2025
டாஸ்மாக் வழக்கு: ED-க்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. சிபிஐ கூட சோதனை செய்யும் முன்பு சம்பந்தப்பட்ட அரசிடம் தகவல் சொல்கிறது என குறிப்பிட்ட SC, ஒரு வழக்கில் உரிய விசாரணை நடக்கவில்லை என சந்தேகம் எழுந்தால், அதில் உடனடியாக ED தலையிடுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், 3 நாள் சோதனையில் TASMAC அதிகாரிகள் அடைத்து வைக்கப்பட்டனரா எனவும் அமலாக்கத்துறையிடம் SC கேட்டுள்ளது.