News October 24, 2024
தமிழக மீனவர்கள் 16 பேர் கைது.. இலங்கை அடாவடி

தமிழக மீனவர்கள் 16 பேரை எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்திருப்பது மீனவ கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் 2 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லைத் தாண்டி வந்து கடலில் மீன்பிடித்ததாக கூறி 16 பேரை கைது செய்து, 2 படகுகளையும் பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளது.
Similar News
News January 28, 2026
நாடாளுமன்றத்தில் ஒலித்த ஒற்றை தமிழ் குரல்!

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதி முர்மு ஆற்றிய உரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பேசினார் CP ராதாகிருஷ்ணன். முன்னதாக தனது உரையை தமிழில் தொடங்கிய அவர், தாயாய், தந்தையாய், குருவாய், தெய்வமாய் நாம் அனுதினமும் வழிபடுகின்ற புனித பாரத அன்னையின் பொற்பாதங்களை வணங்குவதாக கூறினார். மேலும், ஜனநாயக நாட்டில் பல முரணான கருத்துகள் இருந்தாலும், சில விஷயங்களில் இந்தியர்கள் ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என்றார்.
News January 28, 2026
வரலாறு காணாத உயர்வு.. தங்கம் விலை புதிய உச்சம்

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் இன்று ஒரே நாளில் ₹5,200 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 சவரன் காலையில் ₹2,960 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும், ₹2,240 அதிகரித்து நடுத்தர மக்கள், நகைப் பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. சென்னையில் தற்போது, ஆபரணத் தங்கம் 1 கிராம் ₹15,610-க்கும், 1 சவரன் ₹1,24,880-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News January 28, 2026
அஜித் பவார் கடிகாரம்: அங்கீகாரமும்.. அடையாளமும்

மகாராஷ்டிரா DCM அஜித் பவார், கொடூரமான விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சிதறிக்கிடந்த விமான பாகங்களுக்கு இடையே, அவரது உடலை கையில் இருந்த கைக்கடிகாரம் தான் அடையாளம் காட்டியது. இதில் நெகிழ வைக்கும் சோகம் என்னவென்றால், கடிகாரம்தான் அவரது NCP கட்சியின் சின்னம். MLA-வாக, அமைச்சராக, DCM-ஆக அவரை உயர்த்தி அழகு பார்த்த அதே கடிகாரம்தான், இன்று அவரது உடலை மக்களுக்கு அடையாளம் காட்டியுள்ளது.


