News October 24, 2024
யமுனையில் ரசாயனம்.. பாஜக மீது அதிஷி தாக்கு

யமுனை நதியில் ரசாயன நுரை பொங்கிவர பாஜகவே காரணம் என்று டெல்லி CM அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜக ஆட்சி நடைபெறும் ஹரியானா, உ.பி.யில் உள்ள ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத ரசாயன கழிவு திறக்கப்படுவதால் யமுனைநதி மாசடைந்து விட்டதாகவும் சாடியுள்ளார். டெல்லியில் காற்று மாசு, தண்ணீர் மாசு ஏற்படுவதற்கு பாஜகவின் மோசமான அரசியலே காரணம் என்பதை மக்கள் அறிவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 20, 2026
மாதம் ₹2,000.. தமிழக அரசு அறிவிப்பு

‘அன்புக்கரங்கள்’ திட்டம் மூலம் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் TN அரசு ₹2,000 வழங்குகிறது. 18 வயது நிறைவடையும் வரை தொகை வழங்கப்படுவதோடு, உயர்கல்விக்கும் அரசு உதவி செய்யும். பெற்றோர் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் நோய்களுடன் வாழ்ந்தாலோ (அ) மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறனாளியாக இருந்தாலோ கூட இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். தாலுகா ஆபீஸை அணுகுங்கள். SHARE.
News January 20, 2026
சூடுபிடிக்கும் தங்கம் திருட்டு வழக்கு: 21 இடங்களில் ரெய்டு

<<18345270>>சபரிமலையில்<<>> தங்கம் திருடப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகம், கேரளா, பெங்களூருவில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்புடைய 21 இடங்களில் ED அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதில், சென்னையில் தங்க முலாம் பூசும் நிறுவனம் தொடர்புடைய 6 இடங்களில் ED ரெய்டு நடைபெற்று வருகிறது.
News January 20, 2026
ஜன நாயகன் ரிலீஸ்: ஐகோர்ட் சரமாரி கேள்வி

ஜன நாயகன் வழக்கை விசாரித்த சென்னை HC அமர்வு, U/A சான்றிதழ் தர முடிவு செய்துவிட்டு அதனை மாற்றியது ஏன் என தணிக்கை வாரியத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், படத்தை பார்த்துவிட்டு யார் புகார் கடிதம் எழுதியது என்ற கேள்விகளையும் நீதிபதிகள் எழுப்பினர். மேலும், இன்றே தீர்ப்பளிக்கும் வேண்டும் என்ற SC-ன் உத்தரவையும் சுட்டிக்காட்டிய நிலையில், உணவு இடைவேளைக்குப் பிறகு விசாரணை தொடரவுள்ளது.


