News October 24, 2024

FLASH: 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், தி. மலை, கள்ளக்குறிச்சியில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. மேலும், 29ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. SHARE IT.

Similar News

News January 15, 2026

தமிழகத்தின் புதிய ஜல்லிக்கட்டு மைதானம்!

image

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில், ₹3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை DCM உதயநிதி இன்று திறந்து வைத்தார். அவர் பேசுகையில், திருச்சிக்கு மலைக்கோட்டை, காவிரி ஆறு எப்படி அடையாளமோ, அதே போன்று சூரியூர் ஜல்லிக்கட்டும் ஒரு அடையாளம் என்றவர், இதுவரை மந்தையில், குளத்தில் நடந்த சூரியூர் ஜல்லிக்கட்டு நாளை ஜன.16 முதல் இந்த நிரந்தர அரங்கில் நடைபெறும் என அறிவித்தார்.

News January 15, 2026

அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் CM மரியாதை!

image

பொங்கல் திருநாளை முன்னிட்டு அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று CM ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக கடற்கரை சாலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் வசிக்கும் வீடற்றவர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். மேலும், நாராயணப்பதெருவில் சாலையோரம் வசிக்கும் மக்களை சந்தித்தவர், அங்கு வசித்துவரும் துரை-சுமதி என்ற தம்பதியரின் ஆண் குழந்தைக்கு ‘வெற்றி’ என்று பெயர் சூட்டியுள்ளார்.

News January 15, 2026

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: ராஜ்நாத் சிங்

image

தீவிரவாத மனப்பான்மை நீடிக்கும் வரை அமைதிக்கான நமது ஆபரேஷன் தொடரும், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். ஜெய்ப்பூரில் நடந்த தேசிய ராணுவ தின நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்தியா தனது தேசிய குணத்தை வெளிப்படுத்தியது என்றும், வரலாற்றில் தைரியத்தின் அடையாளமாக ஆபரேஷன் சிந்தூர் நினைவுகூரப்படும் என்றும் அவர் பேசியுள்ளார்.

error: Content is protected !!