News March 18, 2024
புதுவை: காரைக்காலில் துப்பாக்கிகள் வைத்திருக்க தடை

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காரைக்காலில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளது. இதனால், துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே துப்பாக்கி வைத்திருக்க உரிமம் பெற்றுள்ளவர்கள் உடனடியாக துப்பாக்கிகளை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Similar News
News December 18, 2025
புதுச்சேரி: வாய்க்காலில் தவறி விழுந்த பசுமாடு

புதுச்சேரி அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபம் அருகில் உள்ள பெரிய சைடு வாய்க்காலில் பசுமாடு ஒன்று நேற்று தவறி விழுந்துள்ளது. இதனை அடுத்து பொதுமக்களால் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அங்கு வந்த ஊழியர்கள் அரியாங்குப்பம் காவல்துறை ஆய்வாளரிடம் தொடர்பு கொண்டு, தீயணைப்புத் துறை வரவழைத்து வெகு நேரமாக உயிருக்குப் போராடிய அந்த பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.
News December 18, 2025
புதுவை: செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

கோரிமேடு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில், தன்வந்திரி காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படையினர் கோரிமேடு பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த வல்லரசு, பெங்களூரைச் சேர்ந்த இப்ராகிம் என இருவரை ரகசியத் தகவலின் பேரில் நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் நகைகள் மற்றும் பைக், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
News December 18, 2025
புதுவை: செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

கோரிமேடு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில், தன்வந்திரி காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படையினர் கோரிமேடு பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த வல்லரசு, பெங்களூரைச் சேர்ந்த இப்ராகிம் என இருவரை ரகசியத் தகவலின் பேரில் நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் நகைகள் மற்றும் பைக், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


