News March 18, 2024
புதுவை: காரைக்காலில் துப்பாக்கிகள் வைத்திருக்க தடை

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காரைக்காலில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளது. இதனால், துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே துப்பாக்கி வைத்திருக்க உரிமம் பெற்றுள்ளவர்கள் உடனடியாக துப்பாக்கிகளை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Similar News
News October 31, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.எஸ்.பி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம் என்று கூறினால் அவர்களது தொடர்பை உடனடியாக துண்டித்து விடுங்கள். உங்களுடைய சிம்கார்டு ஆதார்கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கு தொடங்கி அதில் AWALA பணம் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது என்றும், அந்த பணம் தீவீரவாத செயலுக்கு பயன்படுத்த பட்டுள்ளது என்றும் மிரட்டி பணம் கேட்டால் நம்ப வேண்டாம்.” என கூறியுள்ளார்.
News October 31, 2025
புதுச்சேரி: மூன்று நாட்களில் 64 பேர் கைது

புதுச்சேரிக்கு சுற்றுலா வருபவர்களில் பெரும்பாலானோர் இங்குள்ள மதுபானக்கடைகளையே நாடுகின்றனர். மது அருந்தி விட்டு அவர்கள் ரகளையில் ஈடுபடுகின்றனர். கடந்த மூன்று நாட்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டவர்கள் மீது மொத்தம் 47 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இதில் 64 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 31, 2025
தேசிய ஒற்றுமை தினம் -புதுச்சேரி முதல்வர் வாழ்த்து

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் நம் தேசத்தின் ஒற்றுமைக்கான சின்னமாக விளங்கிய சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளில் அவரின் மகத்தான தியாத்தையும் உறுதியான தலைமைத்துவத்தையும் நினைவு கூர்ந்து போற்றுவோம் ஒற்றுமை தான் நம் வலிமை ஒற்றுமை தான் நம் அடையாளம் என்று அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


