News October 24, 2024
விக்ரவாண்டியில் தவெக பிரமாண்டமான கட்-அவுட்கள்

விக்கிரவாண்டி அருகே வி சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான மாநாட்டு திடல் பகுதியில் பணிகள் மும்முரமாக இரவு பகலாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இங்கு காமராஜர், பெரியார், விஜய், அம்பேத்கர் என பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட உருவ கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.
Similar News
News December 29, 2025
விழுப்புரம்:தாய் சொன்ன வார்த்தையால் மகள் விபரீதம்!

விக்கிரவாண்டி அருகே உள்ள கீழக்கொண்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், இவரது மகள் சுபாஸ்ரீ (17) சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.தற்போது, அரையாண்டு விடுமுறை என்பதால் அவரது தாய் சாந்தி வீட்டு வேலை செய் என்று கூறியதால், மனமுடைந்த மாணவி சுபாஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 29, 2025
விழுப்புரம்:வாகனத்தில் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

வந்தவாசி வட்டம், வெண்மந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் ரா.மணிகண்டன் (22). இவர், சனிக்கிழமை இரவு திண்டிவனம் -புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கிளியனூர் காவல் சரகத்துக்குள்பட்ட ஆண்டியார்பாளையம் அருகே பைக்கில் சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை.
News December 28, 2025
விழுப்புரம்: ஹோட்டலில் தரமற்ற உணவா?

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீப காலமாக சில முக்கிய உணவகத்தில் இதுபோன்ற குற்றசாட்டுகள் எழுந்தது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இதுபோன்ற பயனுள்ள தகவல்களை ஷேர் பண்ணுங்க!


