News October 24, 2024
சல்மானுக்கு ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சல்மான் கானிடம் ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நபரை மும்பை பாேலீஸ் கைது செய்துள்ளது. பிஸ்னோய் கும்பலிடம் இருந்து சல்மானுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், அண்மையில் ₹5 கோடி கேட்டு போலீசுக்கு குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து விசாரித்து வந்தபோது, தனது செயலுக்கு மன்னிப்புகோரி அந்த நபர் மீண்டும் செய்தி அனுப்பியிருந்தார். இதனடிப்படையில் விசாரித்து, ஜாம்செட்பூரை சேர்ந்தவரை கைது செய்துள்ளது.
Similar News
News December 24, 2025
இளைஞர்களின் ஆற்றலில் இஸ்ரோவின் எழுச்சி: PM

இந்திய இளைஞர்களின் ஆற்றலால், நமது விண்வெளி திட்டங்கள் மிக வலிமையாக மாறியுள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். <<18656125>>புளூபேர்ட்<<>> செயற்கைக்கோளை ஏவிய LVM3 ராக்கெட்டின் நம்பகமான செயல்பாடுகள், ககன்யான் போன்ற எதிர்கால திட்டங்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைப்பதாக அவர் குறிப்பிட்டார். வணிக ரீதியிலான விண்வெளி சேவைகளை விரிவுபடுத்தவும், சர்வதேச கூட்டணிகளை வலுப்படுத்தவும் இது உதவுவதாக அவர் கூறியுள்ளார்.
News December 24, 2025
வெள்ளி விலை இன்று ஒரே நாளில் ₹10,000 உயர்ந்தது!

இது என்னடா..! வெள்ளிக்கு வந்த வாழ்வு என வாயைப் பிளக்கும் வகையில் வெள்ளி விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று கிலோவுக்கு ₹3,000 அதிகரித்த நிலையில், இன்று ஒரே நாளில் ₹10,000 அதிகரித்து ₹2,44,000-ஐ தொட்டுள்ளது. சில்லறை விலையில் 1 கிராம் ₹244-க்கு விற்பனையாவதால் வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் உச்சபட்ச மகிழ்ச்சியில் உள்ளனர். வரும் நாள்களில் வெள்ளியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
News December 24, 2025
MGR நினைவிடத்தில் EPS எடுத்த சபதம்

MGR-ன் 38-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் EPS தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அதிமுக ஆட்சி மீண்டும் மலர உழைப்போம் என அனைவரும் சபதம் எடுத்துக்கொண்டனர். ஒரு இயக்கத்தை மட்டுமல்ல, ஒரு தலைமுறையின் கனவுகளை உருவாக்கி சென்றவர் MGR என புகழ்ந்த EPS, தமிழக மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்ட MGR-ன் வழியை பின்பற்றுவோம் என்று உறுதியேற்றார்.


