News October 24, 2024
சல்மானுக்கு ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சல்மான் கானிடம் ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நபரை மும்பை பாேலீஸ் கைது செய்துள்ளது. பிஸ்னோய் கும்பலிடம் இருந்து சல்மானுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், அண்மையில் ₹5 கோடி கேட்டு போலீசுக்கு குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து விசாரித்து வந்தபோது, தனது செயலுக்கு மன்னிப்புகோரி அந்த நபர் மீண்டும் செய்தி அனுப்பியிருந்தார். இதனடிப்படையில் விசாரித்து, ஜாம்செட்பூரை சேர்ந்தவரை கைது செய்துள்ளது.
Similar News
News November 1, 2025
அதிதீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலம்!

அதிதீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளதாக அம்மாநில CM பினராயி விஜயன் அறிவித்துள்ளார். உலக வங்கியின் வரையறைப்படி தீவிர வறுமை என்பது தனிநபரின் தினசரி வருமானம் ₹180 ஆகும். கேரளாவில் 2021-ல் 64,006 குடும்பத்தினர் இந்த பட்டியலில் இருந்தனர். அரசின் உதவிகளால் அவர்கள் வறுமை கோட்டிற்கு மேலே சென்றுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. TN-ல் 2024 தகவலின்படி 2.2% பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர்.
News November 1, 2025
கரூரில் விஜய் பேசிய இடத்தை 2-வது நாளாக அளக்கும் CBI

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக CBI அதிகாரிகளின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி விடுமுறைக்கு பின் நேற்றிலிருந்து மீண்டும் அவர்கள் விசாரணையை தொடங்கினர். கூட்டம் நடைபெற்ற சாலையின் பரப்பு, அமைப்பு ஆகியவற்றை நேற்று நவீன கருவிகளுடன் ஆய்வு செய்தனர். இந்நிலையில், இன்றும் 2-வது நாளாக வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் நடைபெற்ற சாலையை அளவிட்டு ஆய்வு செய்தனர்.
News November 1, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹80 உயர்வு!

மாதத்தின் முதல் நாளான இன்று(நவ.1) தங்கம் உயர்வுடன் தனது வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. 22 கேரட் தங்கம், கிராமுக்கு ₹10 உயர்ந்து ₹11,310-க்கும், சவரன் ₹90,480-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹166-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,66,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலையில் நேற்று மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


