News October 24, 2024
சல்மானுக்கு ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சல்மான் கானிடம் ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நபரை மும்பை பாேலீஸ் கைது செய்துள்ளது. பிஸ்னோய் கும்பலிடம் இருந்து சல்மானுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், அண்மையில் ₹5 கோடி கேட்டு போலீசுக்கு குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து விசாரித்து வந்தபோது, தனது செயலுக்கு மன்னிப்புகோரி அந்த நபர் மீண்டும் செய்தி அனுப்பியிருந்தார். இதனடிப்படையில் விசாரித்து, ஜாம்செட்பூரை சேர்ந்தவரை கைது செய்துள்ளது.
Similar News
News January 12, 2026
ராஜ்யசபா + 30 தொகுதிகள்.. பிரேமலதா கறார்!

தேர்தல் நெருங்கும் நிலையில், தேமுதிக எந்த கூட்டணியில் இணையும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ராஜ்யசபா சீட்டுடன் 30 தொகுதிகளை ஒதுக்கினால் மட்டுமே கூட்டணி என EPS-யிடம் பிரேமலதா கறாராக கூறிவிட்டாராம். தேர்தலுக்கு முன்னதாக ராஜ்யசபா MP-க்களை தேர்வு செய்யும் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதால், தேமுதிகவின் கோரிக்கை குறித்து அதிமுக தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம்.
News January 12, 2026
உலகின் மிகப்பெரிய கோயில்கள்

கோயில்கள் பல நூற்றாண்டுகளை கடந்து வரலாற்றையும் கட்டடக்கலையையும் பறைசாற்றுகின்றன. பெரும்பாலான கோயில்கள் மிகப்பெரிய பரப்பளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில், பரப்பளவின் அடிப்படையில் மிகப்பெரிய கோயில்கள் என்னென்னவென்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்க எந்த கோயிலுக்கு போயிருக்கீங்க?
News January 12, 2026
BREAKING: விஜய் பக்கா ப்ளான் இதுதான்!

கரூர் கூட்டநெரிசல் வழக்கு தொடர்பான CBI விசாரணைக்கு விஜய் இன்று காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அவர் டெல்லி செல்கிறார். டெல்லி விமான நிலையம் முதல் CBI அலுவலகம் வரை, ரசிகர்கள் கூடி விடாமல் இருக்க, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு 2 நாள்கள் விசாரணையை முடித்து நாளை மாலை சென்னை திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


