News October 23, 2024
கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கரூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்களுடன் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எதிர்வரும் (28.10.2024) அன்று பிற்பகல் 4.00 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 17, 2025
JUST IN:கரூர் திமுக முப்பெரும் விழாவில் திடீர் மழை!

கரூர் கோடங்கிப்பட்டியில் இன்று நடைபெற்று வரும் திமுகவின் முப்பெரும் விழாவில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சிப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட மூத்த முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறார்.இந்தநிலையில் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென மழை பெய்தது. இதனால், விழாவில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்.
News September 17, 2025
கரூரில் முதலமைச்சரை வரவேற்ற ஆட்சியர்!

கரூர் மாவட்டத்தில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக முப்பெரும் விழா கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ தலைமையில் நடைபெறுகிறது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்பொழுது கரூருக்கு வருகை புரிந்தமைக்காக கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் புத்தகத்தை வழங்கி வரவேற்பு செய்தார்.
News September 17, 2025
திமுக முப்பெரும் விருதுகள் பெறுபவர்கள் யார்?

கரூர் மாவட்டம், கோடங்கிபட்டியில் செப்டம்பர் 17 இன்று நடைபெறும் முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் பெரியார் விருது எம்.பி கனிமொழி, அண்ணா விருது திரு.சீத்தாராமன், கலைஞர் விருது சோ.மா ராமச்சந்திரன், பாரிவேந்தன் விருது குளித்தலை சிவராமன், பேராசிரியர் விருது மருதூர் ராமலிங்கம் மு.க.ஸ்டாலின் விருது பொங்கலூர் பழனிச்சாமி ஆறு நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்க உள்ளார்.